அந்த தைரியம் எடப்பாடிக்கு இல்லை

தமிழ்நாட்டில் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் நேற்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக எடப்பாடி அதிமுக அறிவித்தது.

நன்றி மீண்டும் வராதீர்கள் என்ற சொல்லையும் சமூக வலைதளங்களில் அதிமுக பதிவிட்டது.

இது தொடர்பான கருத்தை பாஜகவின் தில்லித் தலைமை தெரிவிக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியிருப்பதாவது…

இந்த கூட்டணி முறிவு நீண்ட நாள் நீடிக்காது என நான் கருதுகிறேன். இது அதிமுக தரப்பில் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம் எனப் பார்க்கிறேன். அண்ணாமலையை நீக்கிவிட்டு தங்களுடன் இணக்கமாக இயங்கும் யாரையேனும் அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்பதுதான் அதிமுக போட்டுள்ள கணக்கு. இது அனைத்துக்கும் மேலாக பாஜக உடனான கூட்டணியை நிரந்தரமாக முறித்துக் கொள்ளும் தைரியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை

இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Leave a Response