சென்னையில் யாழ்ப்பாண முதல்வர் சி.வி.விக்னேசுவரன்

மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் முன்னாள் தேசியத்தலைவரும் நமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் நினைவு சொற்பொழிவு வரும் 9.11.2014 ஞாயிற்றுக்கிழமை , சென்னை, தி.நகரில் திருமலை பிள்ளை ரோட்டில் உள்ள வித்யோதா பள்ளியில் காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெற உள்ளது.
இச் சொற்பொழிவு நிகழ்வில் சிறப்புரையினை இலங்கையின் வடக்கு மாகாண முதல்வரும் , முன்னால் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியுமான, நீதிபதி விக்னேஸ்வரன் “பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்” (SAFEGUARDING SECURITY AND SOVEREIGNTY) என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
. மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களுக்கு மரியாதையினை செலுத்தும் வகையிலும் மேலும் அசாதாரன சூழலில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற பின் இந்தியாவில் நீதிபதி விக்னேஸ்வரன் பங்கேற்கும் முதல் நிகழ்வாகவும் இந்த நிகழ்வு அமைய உள்ளது.
எனவே தோழர்கள் இந் நிகழ்வில் பங்கேற்க வேண்டுமாயும் அன்புடன் வேண்டுகின்றோம்.
மக்கள் சிவில் உரிமைக்கழகம்

Leave a Response