திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘தர்மபுரி’, ‘பழனி’, ‘திருவண்ணாமலை’, ‘திருத்தனி’, ‘திருப்பதி’ என ஊர்களின் பெயர்களை தனது படத்திற்கு தலைப்பாக வைத்து இயக்கி வந்தார் இயக்குனர் பேரரசு.. இடையில் சில காலம் படம் இல்லாமல் இருந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ‘சாம்ராஜ்யம்-2’ என்கிற படத்தை இயக்கினார்..
இந்தநிலையில் தனது அடுத்த படத்தை இந்த வருடமே துவங்கி, இந்த வருடத்திலேயே ரிலீஸ் செய்யப்போவதாக சபதமே செய்துள்ளார் பேரரசு. சமீபத்தில் ‘பிச்சுவா கத்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு கலந்துகொண்டார்.
இந்தப்படத்தின் கலைஞர்களை வாழ்த்தி பேசிய இயக்குனர் பேரரசு, “ஆரம்பத்தில் நான் வருடத்திற்கு இரண்டு படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.. பின்னர் அது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என மாறியது.. இந்தப்படத்தின் ட்ரெய்லர், பாடல் காட்சிகளை பார்த்ததும், எனது புதிய படத்தை இந்த வருடமே துவங்கி, இந்த வருடத்திலேயே ரிலீஸ் செய்யவேண்டும் என்னை உசுப்பேற்றி விட்டார்கள்.. இனி உடனே ஆரம்பித்து விட வேண்டியதுதான்” என சபதம் செய்யாத குறையாக பேசினார் பேரரசு.
இந்த ‘பிச்சுவா கத்தி படத்தில் இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடிக்க, செங்குட்டுவன் என்பவர் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா காளி வெங்கட், யோகிபாபு, பாலசரவணன், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் என தமிழ்சினிமாவின் முக்கிய காமெடியன்கள் அனைவரும் இணைந்து நடித்துள்ளனர்.
சுந்தர்.சியிடம் கலகலப்பு படம் உட்பட சில் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அய்யப்பன். தற்போது ‘பிச்சுவா கத்தி’ படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.. சுந்தரபாண்டியன், தென்மேற்கு பருவக்காற்று படங்களுக்கு இசையமைத்த என்.ஆர்.ரகுநந்தன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.