
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக தலைவர் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரும் இதை வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக வட்டாரங்கள் இதனால் பரபரப்பாகவே இருக்கின்றன.ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை அருகே வழுவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது….
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்பது ஒன்றும் புதிது அல்ல.எதிர்க்கட்சிகள் கூறுவது போல இது எந்தவித ஆபத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தக் கூடியது அல்ல. இது நல்ல முறை. வரவேற்கத்தக்கது, ஏற்றுக்கொள்ளத்தக்கது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்வதில் கிராமப் பகுதி மக்களுக்கு கடினமாக இருக்கும் என டி.டி.வி.தினகரன் கூறுவது, அவர் எதை நோக்கிப் பயணிக்கிறார் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும். விண்ணப்பம் மிகமிக எளிமையான வகையில் உள்ளது. சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக அதில் வாக்குச்சாவடி அலுவலரின் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் கடினமாக உள்ளது என்று சொல்வது விநோதமாக உள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முதலில் மன்னிப்பு கேட்டு வந்தால், அவர்களை மீண்டும் சேர்ப்பதற்கு பொதுச்செயலாளரிடம் நாங்களும் பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


