விஜய் ஒரு மூழ்கும் கப்பல் – மணிசங்கரய்யர் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுத்தது காங்கிரசு.அக்கட்சியின் இந்தச்செயல் கடும்விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.காங்கிரசுக் கட்சியினரே இதை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். காங்கிரசைச் சேர்ந்த மணிசங்கர் அய்யர் இதுகுறித்து ஒரு நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை….

அண்​மை​யில் நடந்த முடிந்த தமிழ்நாடு சட்​டப்​பேரவைத் தேர்​தலில் காங்​கிரசு 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 5 இடங்​களில் வென்​றுள்​ளது. இந்த வெற்றி காங்​கிரசுக் கட்​சி​யின் சொந்தபலத்​தால் கிடைத்​து​விட​வில்​லை.திமுக
கூட்​ட​ணி​யால்​தான் சாத்​தி​ய​மானது.நான் எம்​.பி.​யாக இருந்த மயி​லாடு​துறை திமுக கூட்​ட​ணிக்கு எஃகுக்
கோட்​டை​யாக இருந்​துள்​ளது.காரணம் மயி​லாடு​துறை மக்​கள​வைத் தொகு​திக்கு உட்​பட்ட 6 சட்​டப்​பேரவைத்
தொகு​தி​களில் 5 இடங்​களை திமுக கூட்​டணிக் கட்​சிகள் வென்​றுள்​ளன.இரண்டு இடங்​கள் திமுக​வுக்​கும்,தேமு​திக, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக்,காங்​கிரசுக் கட்​சிகளுக்கு தலா ஓர் இடமும் கிடைத்​துள்​ளன.அதாவது 5
தொகுதி​களில் விஜய்​யின் தவெக​வுக்கு எதி​ராக மக்கள் வாக்​களித்​துள்​ளனர்.

எனவே,மக்​கள் தீர்ப்பு திமுக கூட்டணிக்கு ஆதர​வாக​வும் தவெக​வுக்கு எதி​ராக​வும் அமைந்​திருப்​ப​தையே இந்த முடிவு​கள் காட்​டு​கின்​றன.கடந்த 35 ஆண்டுகாலமாக தனித்​து​வ​மிக்க மயி​லாடு​துறை தொகு​தி​யுடன் கொண்ட என் தொடர்​பின் பின்​னணியி​லிருந்தே இதனை ஆழ்ந்த வருத்​தத்​துட​னும் துயரத்​துட​னும் தெரிவிக்​கிறேன்.

அதே​நேரத்​தில்,மாநில அளவி​லான மக்​கள் தீர்ப்​பு,திமுக-அ​தி​முக ஆகிய இரு திரா​விடக் கட்​சிகளுக்கு எதி​ராக​வும், விஜய்​யின் தவெக​வுக்கு ஆதர​வாக​வும் அமைந்​துள்​ளது என்​பது உண்​மையே.விஜய் முற்​றி​லும் மதச்​சார்​பற்​றவர்
என்​பதும்,பரந்த திரா​விட ஒரு​மைப்​பாட்​டுக்கு உட்​பட்​ட​வர் என்​பதும் உண்​மை​தான்.அதில் எள்​ளள​வும் சந்​தேகம்
இல்​லை.ஆனால்,நீண்​ட​கால நம்​பக​மான கூட்​ட​ணிக்கட்​சியை காங்​கிரசு இப்​படி திடீரென்று கைவிடு​வது மலி​வான சந்​தர்ப்​ப​வாத அரசி​யல் வாசனையை வீசுகிறது.சந்​தர்ப்​ப​வாதம்​தான் சாணக்​கிய அரசி​யலின் சாரம்.

ஆனால்,அது காந்​தி​யின் காங்​கிரசின் உண்மை அரசி​யல் அல்ல.இந்​திய தேசிய காங்​கிரசின் மூதாதையர்​கள்
இத்​தகைய சந்​தர்ப்​ப​வாத,மலி​வான அரசி​யலை ஏற்​றுக்​கொள்​வார்​கள் என்று என்​னால் கற்​பனை கூடச் செய்ய முடிய​வில்​லை.மேலும்,எப்​போதும் எதார்த்​த​வா​தி​யான ஜவகர்​லால் நேரு​வும் சந்​தேகப்​பட்​டிருப்​பார்.நீண்டகால​மாக கொந்​தளிப்​பான காலங்​களி​லும் நம்​முடன் நின்ற,நெருக்​கடி​யில் உறு​தி​யாக இருந்த ஒரு நேர்​மை​யான கூட்​டணிக் கட்​சியை மே 4 ஆம் தேதி வரை நாம் இகழ்ந்த ஒரு​வருக்​காகக் கைவிடு​வது என்​பது அரசி​யல்ரீதி​யில்
அர்த்​த​முள்​ள​தா? நெறி​முறை​யான​தா? அரசி​யல் ரீதி​யில் கூட புத்​தி​சாலித்​தன​மான​தா?

இந்தக் கேள்வி​களோடு தவிக்​கும்​போது,போட்டி முடிந்தபின் குதிரையை மாற்​றிக் கொள்​ளும் இந்தச்செயல் என்​னில் ஆழ்ந்த அமைதி​யின்​மையை ஏற்​படுத்​துகிறது.இத்​தகைய சந்​தர்ப்​ப​வாத மாற்​றத்​தில்,மகாத்மா காந்தி
கற்​றுக்கொடுத்​தது போல நன்னடத்​தை,தன்​னடக்​கம்,தியாகம் ஆகியவற்​றால் தூண்டப்படா​மல்,அரசி​யலின்
எதிர்​காலம் நிச்​சயமற்​ற​தாக இருந்தா​லும் உடனடிப் பலனை நோக்கி நகர்​கிறோம் என்​பது தெளிவாகிறது.

இந்​தியா கூட்​ட​ணி​யில் திமுக தலை​வர் மு.க.ஸ்டாலின் ஒரு​வர் மட்​டுமே ‘சகோ​தரர்’ இராகுல் காந்​தியை பிரதமர் வேட்பாளர் என்று பிரகடனப்​படுத்​தி​னார்.அந்த நண்பரை இவ்​வாறு திடீரெனக் கைவிடு​வதை எப்​படி நியாயப்படுத்த முடி​யும்? மேலும்,ஒரு​வர் தண்​ணீரில் மூழ்​கிக்​கொண்​டிருக்​கும்​போது,கரைசேர வேண்​டும் என்​ப​தற்​காக,அந்த
மூழ்​கடிப்​புக்கே பொறுப்​பான நபரோடு…ஓர் அமைச்​சர் அல்​லது இரண்டு அமைச்​சர் பதவிக்​காக நமது கவுர​வத்தை விற்றுவிடுவதா? மிக எதார்த்​த​மாகச் சிந்​தித்​தா​லும்,நாம் நிலையான ஒரு கப்​பலில் சேரு​கிறோமா? அல்​லது
மூழ்​கும் கப்பலில் ஏறும் எலி​யாக மாறுகிறோ​மா?

என்​னைப் பொறுத்​தவரை,நெருக்​கடி​யான நேரங்​களில் கூட நெறி​முறை​யும் அரசி​யலும் ஒன்​றிணை​கின்​றன.நமது மிகக்கடின​மான காலங்​களி​லும் திமுக நம்​முடன் உறு​தி​யாக நின்​றது.எனவே,அவர்​களு​டன் கூட்​ட​ணியைத்
தொடர்​வது​தான் நெறி​முறை.திமுக அரசு கடந்த 5 ஆண்​டு​களில் தமிழ்நாட்டை ஆசிய அளவில் மிக உயர்ந்த
இடத்​துக்குக் கொண்டு சென்​றிருக்​கிறது.

சில ஆண்டு காலம் காத்​திருந்​து,2029 அல்​லது 2031 இல் யாரைக் கூட்​ட​ணிக்குத் தேர்ந்​தெடுப்​பது என்று நன்கு
மதிப்​பீடு செய்து காங்​கிரசு முடி​வெடுத்​திருக்​கலாம்.

ஆனால், காங்​கிரசுக் கட்சி போட்​டி​யிட்ட 28 தொகு​தி​களில் 23 இடங்​களில் தவெக நம்மை தோற்​கடித்​திருக்​கிறது. இந்தப் பின்​னணி​யில் அக்​கட்​சி​யுடன் காங்​கிரசுக்கட்சி கூட்​டணி சேரு​வது,கட்​சியை நெறியற்​ற​தாக மட்​டுமல்ல, அரசி​யல் ரீதி​யிலும் மூர்க்​க​மான​தாகக் காட்​டும்.

மேலும்,பின்​கதவு வழியே வகுப்​பு​வாத பாஜக நுழைவதை இது எளி​தாக்​கு​மா​னால்,அரசி​யல் கால்​பந்து வரலாற்​றில் மிகமோச​மான ‘சேம் சைட் கோல்’ அடித்​தவர்​கள் ஆவோம்.இனி யார் நம்மை நம்புவார்கள்?

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response