அதிமுகவை பலவீனப்படுத்துகிறது பாஜக – தெரிந்தும் அமைதிகாக்கும் எடப்பாடி

அ​தி​முக​வில் இருந்து விஜய் கட்சிக்குச் சென்ற முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் அக்கட்​சி​யின் நிர்​வாகக் குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் மற்​றும் ஈரோடு, கோவை, நீல​கிரி, திருப்​பூர் ஆகிய 4 மாவட்​டங்​களின் அமைப்புச் செய​லா​ளர் பொறுப்பு வகித்து வரு​கி​றார்.

அவர் அதி​முக​வில் அதிருப்​தி​யில் உள்ள முன்​னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகி​களை இழுக்​கும் முயற்​சி​யில் தீவிர​மாகக் களம் இறங்​கி​யுள்​ளார்.

குறிப்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமி​யின் கோட்​டை​யாகக் கருதப்​படும் சேலம், நாமக்​கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய கொங்கு மண்​டலத்​தைச் சேர்ந்த அதி​முக முன்​னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு செங்​கோட்​டையன் நேரடி​யாகத் தொடர்​பு​கொண்டு பேசி வரு​கி​றார்.

இதுகுறித்து அதி​முக முன்​னாள் சமஉ ஒரு​வர்,அதி​முக​வில் எடப்பாடி பழனிச்​சாமி​யால் ஓரங்​கட்​டப்​பட்ட மற்​றும் அவரின் தலை​மையை ஏற்கவிரும்​பாத முன்​னாள், இந்​நாள் சம க்​கள், மாவட்ட, நகர நிர்​வாகி​கள் பலர் உள்​ளனர். இந்த அதிருப்​தி​யாளர்​களுக்கு வரும் சட்​டப்​பேரவைத் தேர்​தலில் போட்​டி​யிட நிச்​ச​யம் வாய்ப்பு வழங்​கப்​ப​டாது.

அவ்​வாறு ஓரம்கட்​டப்​பட்ட முன்​னாள், இந்​நாள் சமஉக்​கள் மற்​றும் கட்சி நிர்​வாகி​களை செங்​கோட்​டையன்​ தொலைபேசியில் அழைத்​துப் பேசுகி​றார். அவரிடம் தேர்​தல் செல​வுக்குப் பணம் எது​வும் இல்லை என்று
கூறி​னாலும் என்னை நம்பி வாங்க எனக் கூப்பிடுகிறார்.

சில தினங்​களுக்கு முன் சேலம் மாவட்​டம் ஓமலூரைச் சேர்ந்த முன்​னாள் அதி​முக சமஉவும், சேலம் புறநகர் மாவட்ட எம்​ஜிஆர் மன்றச் செய​லா​ள​ரு​மான பல்​பாக்கி கிருஷ்ணன், செங்​கோட்​டையன் முன்​னிலை​யில்
தவெக​வில் இணைந்​துள்​ளார். இது​போல் பலருக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்​கப்​பட்டு வரு​கிறது.

யார் யார் எல்​லாம் தவெக​வுக்குத் தாவ உள்​ளனர் என்​பது வரும் நாட்​களில் தெரிய​வ​ரும். திமுக உள்​ளிட்ட
பிற கட்​சி​யினரை செங்​கோட்​டையன் தொடர்பு கொள்​வது கிடை​யாது. செங்​கோட்​டையனை வைத்து அதி​முகவை, பாஜக பலவீனப்​படுத்தி வரு​கிறது. இதை எடப்பாடி பழனிச்​சாமி​யும் நன்கு அறி​வார். ஆனால் மயான அமைதி காத்து வரு​கிறார்

என்​று கூறியிருக்கிறார்​.

Leave a Response