இலங்கை அதிபர் தேர்தல் அறிவிப்பு – தமிழீழ மக்கள் சார்பில் பொதுவேட்பாளர்

2019 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றார்.

அதன்பின், 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்குக் காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதையடுத்து இருவரும் பதவி விலகினர்.

அதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தொற்றுமை அடிப்படையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றனர்.

இலங்கையில் தற்போதைய அதிபர் பதவிக்காலம் நவம்பர் 17 ஆம் தேதியுடன் முடிவு பெறுகிறது.

அதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,இத்தேர்தலில் தமிழீழ மக்கள் சார்பில் ஒரு பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response