நாமக்கல் தொகுதி உடன்பாடு – திமுக கூட்டணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று மாலை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று மாலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

திமுக கூட்டணியில் எங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் எங்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டும் எங்கள் கட்சியே அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது. எனவே,இம்முறையும் அந்தத் தொகுதியையே எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டோம். அதை திமுகவும் ஒப்புக்கொண்டது.

எனவே, எங்கள் கட்சி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிருகிறது.எங்கள் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற ஏ.கே.பி.சின்ராஜ், இம்முறை போட்டியிடப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார். அதனால் இம்முறை ஒரு புதுமுகம் வேட்பாளர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. யார் போட்டியிடுவது? என்கிற அறிவிப்பை எங்கள் கட்சி செயற்குழுவில் பேசி விரைவில் அறிவிப்போம்.

கடந்த முறையும் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டோம்.இம்முறையும் அதே சின்னத்தில் போட்டியிருகிறோம்.

எங்கள் கூட்டணி தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response