
தமிழ்நாடு அரசின்,இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
அறநிலையத் துறை சார்பில் திருமண மண்டபங்கள்,வணிக வளாகங்கள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்புகள்
நீதிமன்றத் தடையாணை காரணமாகவும்,சம்பந்தப்பட்ட கோயில்களின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டும்
தற்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு,தற்போதுவரை தொடங்கப்படாத ரூ.115.77 கோடி மதிப்பீட்டிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ.130 கோடி மதிப்பீட்டிலான 17 வணிகவளாகங்கள் கட்டும்
பணிகள் என மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பீட்டிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் இரத்து
செய்யப்பட்டுள்ளன.இந்த நிதியைக் கொண்டு கோயில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில்
புதியதிட்டங்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில்,கோவில்களில் மூலம் கிடைத்து வரும் வருமானத்தை கோவில்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்றி,பல நூறுகோடி ரூபாய் உபரி நிதியை,அரசுக்குச் சொந்தமான மற்றும் நலிவடைந்து வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்ய முடிவுசெய்து,2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17,2026 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.
அதோடு,திருமண மண்டபங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதற்கு,பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.கோயில் நிதியை வேறு எந்த நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது என்பது அவர்களுடைய நிலைப்பாடு.
அவர்களுடைய நிலைப்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு விஜய் அரசு,திமுக அரசு தொடங்கிய நலத்திட்டங்களுக்கு அனுமதியை இரத்து செய்திருப்பது வெகுமக்களுக்கு அதிர்ச்சியையும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.


