ஓரணியில் தமிழ்நாடு – சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

கா​விரி ஆற்​றின் குறுக்கே மேக​தாது​வில் அணைகட்ட முயலும் கர்​நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும்,புதிய அணை கட்​டும் திட்​டத்​துக்கு எவ்​வித அனு​ம​தி​யும் அளிக்​கக்கூடாது என்று ஒன்றிய அரசை வலி​யுறுத்​தி​யும் தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் கொண்​டு​வந்த அரசினர் தனித் தீர்​மானம்,அனைத்​துக் கட்​சிகளின் ஆதர​வுடன் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

மேகதாது அணை தொடர்பாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் நேற்று அரசினர் தனித்தீர்​மானம்
கொண்டுவந்​தார்.அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது….

காவிரி நடு​வர் மன்​றம் கடந்த 2007 பிப்​ரவரி 5 ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்​பு,உச்சநீதி​மன்​றம் கடந்த 2018 பிப்ரவரி​.16 ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஆகிய​வற்றை மதிக்​காமல்,சம்​பந்​தப்​பட்ட படுகை மாநிலங்​களின்
ஒப்​புதலை​யும்,ஒன்றிய அரசின் எந்​த​வித அனு​ம​தி​யை​யும் பெறாமல் தன்​னிச்​சை​யாக மேகதாது​வில் அணை கட்ட கர்​நாடக அரசு முயற்​சிப்​பதை ஏற்க முடி​யாது. கர்​நாடக அரசின் இந்தச் செயலுக்கு கடும்எதிர்ப்பைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

கர்​நாடக அரசின் மேகதாது அணை திட்​டத்​துக்கு தொழில்​நுட்​பம்,சுற்​றுச்​சூழல் உட்பட எவ்​வித அனு​ம​தி​யை​யும்
ஒன்றியஅரசு அளிக்​கக் கூடாது.காவிரி நடு​வர் மன்​ற​மும்,உச்சநீதி​மன்​ற​மும்,காவிரிப்படுகை ஒரு பற்​றாக்​குறை படுகை எனக்குறிப்​பிட்​டு,படு​கை​யின் மொத்த நீரை​யும்,படுகை மாநிலங்​களுக்கு பகிர்ந்​தளித்​து​விட்​ட​தால்,காவிரிப் படு​கை​யில் புதியதிட்​டங்​களை மேற்​கொள்​ளவோ,கூடு​தலாக நீரைப் பயன்​படுத்​தவோ இயலாது.

இந்த விவ​காரம் தமிழகம் மற்​றும் கர்​நாடக மாநிலங்​களின் உணர்​வுப்​பூர்​வ​மான பிரச்​சினை.எனவே,
மேகதாது​விலோ,காவிரிப்படு​கை​யில் வேறு எந்த இடத்​திலோ அணை அல்​லது புதியநீர்த்​தேக்​கத் திட்​டத்​தை,
பிற படுகை மாநிலங்​களின் ஒப்​புதலின்​றி​யும்,ஒன்றிய அரசின் அனு​ம​தி​யின்​றி​யும் மேற்​கொள்​ளக்கூடாது என
கர்​நாட​காவுக்கு ஒன்றியஅரசு அறி​வுறுத்த வேண்​டும்.கர்​நாடக அரசின் விரி​வான திட்டஅறிக்​கையை ஒன்றிய நீர்வளக்குழு​மம் பரிசீலிக்​கவோ,அதன்​மீது நடவடிக்கை மேற்​கொள்​ளவோ,அதற்கு அனு​மதி வழங்​கவோ கூடாது. மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் தாவா சட்​டத்​தின்​கீழ் புதிய நடு​வர்மன்​றத்தை ஒன்றியஅரசு
அமைக்கவேண்​டும்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தீர்​மானத்தை முன்​மொழிந்து முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது…..

அரசி​யல் கட்​சிகளுக்​குள் கொள்​கை,நிலைப்​பாடு​களில் வேறு​பாடு​கள் இருக்​கலாம்.ஆனால்,மக்​களுக்​கான பிரச்​சினை என்​றால்,எல்லால் கட்​சிகளுமே மக்​கள் பக்​கம்​தான் நிற்​கும்.நமது விவ​சா​யிகள்,மக்​களுக்​காக நிற்கவேண்​டியது நமது கடமை.நதிநீர் உரிமை​யைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும் நம் அனை​வருக்​கும் உள்​ளது.

அந்த உணர்வு அடிப்​படை​யில்,கட்சி வேறு​பாடு​களை ஒதுக்கி வைத்​து​விட்​டு,யாரும் யாரை​யும் குறைசொல்​லாமல் ஒட்​டுமொத்த தமிழகத்​துக்​காக நாம் அனை​வரும் ஓரணி​யில் நிற்​பவர்​கள் என்​பதை நிரூபிக்கவேண்​டும்.நமது
விவ​சா​யிகள்,தமிழக மக்​களுக்​காகக் கொண்டு வரப்​படும் இந்தத் தீர்​மானத்தை ஒரு​மித்த கருத்​துடன் அனை​வரும் நிறைவேற்​றித் தரவேண்​டும்.

இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

இதைத் தொடர்ந்​து,தீர்​மானத்​தின் மீதான விவாதத்​தில் பேசிய திமுக,அதி​முக,காங்​கிரசு,விசிக,பாமக,இந்​திய
கம்​யூனிஸ்ட்,மார்க்​சிஸ்ட்,தேமு​திக,கொமதேக,மதி​முக,மமக,மஜக உள்​ளிட்ட கட்​சிகளின் உறுப்பினர்களும் தங்​கள் ஆதர​வைத் தெரி​வித்​தனர்.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசும்​போது,

மேகதாது அணை கட்​டும் பிரச்​சினை ஒரு புதியவிவாதம் என்​ப​தால்,மாநிலங்​களுக்கு இடையி​லான நதிநீர் தாவா சட்​டத்​தின்​படி,புதிய நடு​வர் மன்​றம் அமைக்கவேண்​டும் என ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலி​யுறுத்​துகிறது எனும் திருத்​தத்தைச் சேர்க்கவேண்​டும் என்றார்.

அதற்கு முதல்​வர் விஜய்,மேகதாது பிரச்​சினை குறித்து எனது தலை​மை​யில் கடந்த மே 26 ஆம் தேதி நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில்,தனி நடு​வர்மன்​றம் அமைப்​பது குறித்து சட்டவல்​லுநர்​களு​டன் ஆலோ​சிக்​கப்​பட்​டது. இதைத்தொடர்ந்​து,தனி நடு​வர்மன்​றம் அமைக்​கத் தேவை​யான சட்டநடவடிக்​கைகள் ஏற்​கெனவே எடுக்​கப்​பட்டு
வரு​கின்​றன.எனவே,எதிர்க்​கட்​சித் தலை​வர் அளித்த கருத்தை தனித்தீர்​மானத்​தில் கூடு​தலாகச் சேர்க்​கலாம்
என்​றார்.

அதன்​பிறகு,முதல்​வர் முன்​மொழிந்த திருத்​தப்​பட்ட தீர்​மானம்,பேர​வை​யில் குரல் வாக்​கெடுப்பு மூல​மாக
ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.தீர்​மானத்​துக்​கு ஆதர​வு அளித்​த அனைத்​துக்​கட்​சிகளுக்​கும்​ முதல்​வர்​ நன்​றி தெரிவித்​தார்​.

Leave a Response