அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழிலும் மொழிபெயர்ப்பு – சீமான் நன்றி

அரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவூதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி என்று சீமான் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றான சவூதி அரேபிய நாட்டின் மெக்கா நகரில் அமைந்துள்ள காஃபாவில் நடைபெறும் அரஃபா நாள் சொற்பொழிவுகள் இனி நமது தாய்மொழியான தமிழிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒளிப்பரப்பப்படும் என்ற அந்நாட்டு அரசின் அறிவிப்பு மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.

பலகோடித் தமிழர்கள் வாழும் இந்திய நாட்டின் பாராளுமன்ற அவைகளிலும், நீதிமன்றங்களிலும் தாய்த்தமிழில் வாதிடும் உரிமைக்காக இன்றுவரை தமிழர்கள் இடைவிடாது போராடிக்கொண்டிருக்கும் நிலையில், இஸ்லாத்தை ஏற்ற தமிழர்கள் இறை வழிபாட்டினை தங்கள் தாய்மொழியிலேயே கேட்டு வழிபட உதவிடும் வகையில் தமிழில் ஒளிபரப்ப முடிவு செய்திருக்கும் சவூதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response