தமிழறிஞர்களுக்குச் சிறப்புச் செய்தார் நடிகர் சிவகுமார் – பலர் பாராட்டு

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற தமிழறிஞர்புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னைக் கதாநாயகனாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற – சூலூர் கலைப்பித்தனுக்கும் துள்ளுந்துகளைப பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. இன்னும் அவர் மிதிவண்டியில் தான் சென்று கொண்டிருக்கிறார்.

சூலூர் கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர்.

அவர் முதியோர் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகைக கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள டிவிஎஸ்100 துள்ளுத்தை வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

சிவகுமாரின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டுகின்றனர்.

Leave a Response