இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மக்கள் கண்ணீர்

ஐந்து மாநிலத் தேர்தல் காரணமாக 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் மார்ச் 22 ஆம் தேதி அதிகரித்தது. 22 ஆம் தேதி ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்கப்பட்டது.

இதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களும் எரிபொருள் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.109.34க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலையும் லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்து ரூ.99.42க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 14 நாட்களில் பெட்ரோல் ரூ.7.94, டீசல் ரூ.7.99 அதிகரித்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலையேறிவருவதால், அத்தியாவாசியப் பொருட்களின் விலையும் தங்களின் பயணச் செலவும் ஒருசேர அதிகரிப்பதாக மக்கள் கண்ணீருடன் கூறி வருகிறார்கள்.

Leave a Response