பங்குனி உத்திர நாளில் பாவலர் அறிவுமதி அமைத்த முருகன்கோட்டம்

பிரபல திரைப்பட பாடலாசிரியர் என்கிற அடையாளமும் கொண்ட தமிழ்த்தேசியப்பாவலர் அறிவுமதி தனது சொந்த ஊரில் முருகன் கோட்டம் ஒன்றை அமைத்து பங்குனி உத்திர தினமான இன்று அதை நடைமுறை வழிபாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது….

சங்க இலக்கியச் சான்றுகளோடு..
கொடும்பாளூர்..மூவர்கோயில் சிற்ப அழகோடு..
மல்லை சிற்பி பாசுகர் அண்ணனின்..உளிப்பரிசுகளால் வாய்த்த..
சிற்பங்கள் கொண்டு..
சு.கீணனூர்
உயிர்த்தமிழ் ஆய்வக வளாகத்தில்..
18.03.22..ஆகிய இன்று
உலகத்
தமிழர்களுக்கான உயரிய
பரிசாய்
இந்த
‘முருகன் கோட்டம்’
அமைத்தோம்
என்பதைத்
தமிழப்
பெருமிதத்தோடு
தெரிவித்து
மகிழ்கிறோம்!

உங்கள்
அறிவுமதி

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response