தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை இலிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.
அதிலிருந்து, சென்னையில் பெட்ரோல் இலிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் இலிட்டர் ரூ 93.93 ஆகவும் விற்பனையானது.
அதிலிருந்து 23 நாட்கள் அமைதியாக இருந்தது மோடி அரசு.
செப்டம்பர் மாத இறுதியிலிருந்து நாள்தோறும் விலையை உயர்த்திவருகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் முந்தைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.97.93க்கு விற்பனை
தமிழ்நாடு அரசு மூன்று ரூபாய் குறைத்தது. இப்போது ஒன்றிய அரசு 3.14 அதிகரித்துவிட்டது.
இதனால் தமிழ்நாடு அரசின் வருவாய் இல்லாமல் போனதோடு தமிழ்நாட்டு மக்களுக்கும் கூடுதல் சுமையைக் கொடுத்திருக்கிறது ஒன்றிய அரசு.
ஒரே நேரத்தில் தமிழ்நாட்டு அரசையும் தமிழ்நாட்டு மக்களையும் பழிவாங்கியிருக்கிறது ஒன்றிய அரசு.