சிங்களர்கள் நிகழ்ச்சியில் பாரதிராஜா அமீர் – தமிழர்கள் கோபம்

இயக்குநர் பாரதிராஜா மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்று வடமாகாண சிங்கள ஆளுநர் சுரேன் ராகவனைச் சந்தித்துள்ளனர்.

வடமாகாண ஆளுநர் செயலகமும் சிங்கள அரசின் கீழ் இயங்கும் வசந்தம் ஊடக குழுமம் நடத்தும் பாடல் போட்டியைத் தொடக்கி வைத்து இருக்கிறார்கள்.

நிகழ்வுக்கு வடமாகாண ஆளுனரைச் சந்தித்துக் கலந்துரையாடி பரிசுப் பொருட்களும், புத்தர் சிலைகளும் பெற்றுள்ளனர்.

இதனால் அவ்விருவரும் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

வாய்ப்புகள் அற்று சரியான வருமானம் அற்றுத் தவிக்கும் பிரபலங்கள் வரிசையில் இவர்களையும் குறிப்பிடலாம்.

தங்கள் திரைப்படங்களை வெளியிடவும் வருமானம் ஈட்டவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை கவர்ந்துகொள்ள ஈழ விடுதலைக்கும் தேசியத் தலைவரையும் தமக்குரியவர் போலவும் தங்களை ஒரு தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொண்ட இவர்கள் தமிழகத்தில் தமிழ்த் தேசியப் போராளிகளாகவும், அதையும் மிஞ்சி தமிழக அரசியலில் இருக்கும் சீமான், கவுதமன் போன்றவர்கள் பாரதிராஜாவை இனமான இயக்குநர் என்றும் தந்தை என்றும் அழைத்தும் தமிழர்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி வரும் நிலையில், ஸ்ரீலங்கா சென்று சிங்கள அரச ஆளுனருடன் கைலாகு கொடுத்து கலந்துறவாடுகிறார்கள்.

வசந்தம் தொலைகாட்சி, வானொலி என்பவை, நேரடியாக சிங்கள அரசின் கீழ் இயங்கும் ஒரு ஊடக வலையமைப்பு, ITN எனும் இதன் தலைமை உடக அமைப்பு 2009 இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராகவும் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கும் சிங்கள மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

வசந்தம் எனும் தமிழ்ப் பிரிவு 2009 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்குப் பின், தமிழர்கள் மத்தியில் இனவுணர்வையும், போராட்ட சிந்தனையையும் மழுங்கடிக்கும் வண்ணம் மஹிந்த ராஜபக்சவால் கொண்டு வரப்பட்ட வடக்கின் வசந்தம் எனும் திட்டத்தில் அமைந்ததாகும்,

இன்று மைத்திரிபால சிறிசேனவின் விசுவாசி வடக்கின் ஆளுநராக வலம்வரும் சுரேன் ராகவன் மூலம் சிங்களத்தின் எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்க ஈழத்துக்கு வருகை தந்துள்ளனர் புலிவேச இயக்குநர்கள்.

இவ்வாறு அவர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

Leave a Response