நெடுவாசலில் வேறு எந்தத் தலைவருக்கும் கூடாத கூட்டம் சீமானுக்கு கூடியது ஏன்?

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று (27.02.2017) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலத்தடி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படும். இதனால் சோலைவனமாக உள்ள இப்பகுதி பாலைவனமாக மாறும். காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராகத் தமிழகத்தில் போராட்டம் வெடித்ததால், அதை திசை திருப்புவதற்காகவே தற்போது தமிழகத்தில் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

காரைக்காலில் எரிவாயு எடுக்கக்கூடாதென அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், நெடுவாசலில் எரிவாயு எடுப்பதற்கு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையிலும்கூட தமிழக முதல்வர் மவுனமாக இருக்கிறார்.

மக்களின் போராட்டத்திற்கும் உணர்விற்கும் மதிப்பளித்து உடனடியாக இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழகம் முழுவதற்குமான பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது. விவசாயத்தை அழித்துவிட்டு எண்ணெய்யை எடுத்து என்ன செய்யப் போகிறோம்,?”

கூடங்குளம் திட்டத்தைப்போல காலம் கடத்தினாலோ, போராட்டம் நடத்துவோரை சிறைபிடித்து வைத்தாலோ இத்திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

சீமான் வந்தபோது பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அவரது பேச்சைக் கேட்டனர். சமீப நாட்களில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கூடாத கூட்டம் இது என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் அடிப்படையான உரிமைச் சிக்கல்களில் வேறு எல்லோரையும் விடவும் சீமானின் குரல் ஓங்கி ஒலிப்பதே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response