திமுகவா? தவெகவா? ஆதரவாளர்களிடம் கருத்து கேட்ட ஓபிஎஸ்

அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் கழக மாவட்ட செய​லா​ளர்​களு​டனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.​

இக்கூட்​டத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசி​ய​தாவது….

எம்​ஜிஆர் அதி​முகவை தொண்​டர்​களுக்​காக உரு​வாக்கி அமோக வெற்றிபெற்று 3 முறை முதல்​வ​ராக பதவி
வகித்​தார்.அதன்​பிறகு கட்​சிப்​பொறுப்பை ஏற்ற ஜெயலலி​தா​வும் 30 ஆண்​டு​களாக அதிமுகவை கட்​டுக்​கோப்​பாக வழிநடத்தி யாராலும் வெல்ல முடி​யாத இயக்​க​மாக தொடர்ந்து முதல்​வ​ராக பதவி வகித்​தார்.

ஆனால் அதன்​பிறகு தொண்​டர்​கள் உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​களை ஒருங்​கிணைக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் ஒருங்​கிணைப்​பாளர், இணை ஒருங்​கிணைப்​பாளர்​கள் பதவி உரு​வாக்​கப்​பட்​டது. ஆனால் திடீரென தனக்​கென ஒரு ஆதர​வுக் கூட்​டத்தை உரு​வாக்​கி, பழனிச்​சாமி தலை​மை​யில் ஒற்​றைத் தலைமை இருந்​தால்​தான் வெற்றி
பெற​முடி​யும் எனக் குரல் எழுப்​பி, போலி​யான பொதுக் குழு​வைக்​கூட்டி அதி​முகவை படு​பா​தாளத்​துக்கு பழனிச்​சாமி தள்​ளி​விட்​டார்.

அவருடைய கட்​டுப்​பாட்​டில் கட்சி சென்ற பிறகு கடந்த எம்​.பி. தேர்​தலில் 7 இடங்​களில் அதாவது 48 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் டெபாசிட்டை இழந்​தது. 14 எம்​.பி. தொகு​தி​களில் மூன்​றாடம் இடத்​துக்கு அதி​முக தள்​ளப்​பட்​டுள்​ளது. பழனி​சாமி வெற்றி பெறு​வார் என மாயையை உரு​வாக்கி விட்​டனர்.

தை பிறந்​தால் வழி பிறக்​கும். தற்​போது தொண்​டர்​கள் எங்கு செல்​வது என தெரி​யாமல் திக்​கு​முக்​காடிப் போய்
உள்​ளனர். இங்கு பேசிய ராமச்​சந்​திரன், வைத்​திலிங்​கம் போன்​றோர் பழனிச்​சாமி அங்​கம் வகிக்​கும் கூட்​டணி வேண்​டாம் என்​றும், பழனிச்​சாமி​யின் தலை​மையை ஏற்க மாட்​டோம் என்​றும் எரிமலை​யாக வெடித்​து​விட்டு
தங்​களது உள்​ளக் குமுறலை உணர்ச்சிப் பெருக்​குடன் தெரி​வித்துச் சென்​றுள்​ளனர். அவர்​களின் உணர்​வு​களை
அப்​படியே நானும் வழிமொழிகிறேன். பழனிச்சாமிக்குப் பாடம் புகட்டுவோம். மக்​கள் நம் மீது மிகுந்த அக்​கறை​யும், நம்​பிக்​கை​யும் வைத்​துள்​ளனர்.

இவ்​வாறு அவர் பேசி​னார்.

நேற்றைய இந்தக் கூட்டத்தில்,திமுக மற்றும் தவெக ஆகியனவற்றில் யாருடன் கூட்டணி அமைப்பது என்று கருத்துக்கேட்பு நடைபெற்றிருக்கிறது.

இன்னொருபக்கம், பாஜகவினர் சமரச முயற்சியில் ஈடுபட்டு மீண்டும் தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response