உச்சநீதிமன்றத்தில் விஜய் கட்சி புதியமனு – விஜய் ஒப்புதலுடன் நடந்ததா?

கரூரில் கடந்த செப்​டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்​கேற்ற பரப்புரைக் கூட்​ட நெரிசலில் சிக்கி 41 பேர்
உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்புப் புல​னாய்​வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், இந்த உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.
கட்​சி​யின் தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா சார்​பில், அவரது வழக்​கறிஞர் யாஷ் எஸ்​.​விஜய் தாக்​கல் செய்​துள்ள மனு​வில்….

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்​தவர்​களுக்கு தவெக சார்​பிலும், கட்சித் தொண்​டர்​கள் சார்​பிலும் அவசர, மருத்​துவ உதவி​கள் தாமதமின்றி உடனடி​யாக வழங்​கப்​பட்​டன.

நெரிசலில் சிக்கி பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்ட 41 பேர் உயி​ரிழந்த நிலை​யில், அவர்​களைக் கைவிட்​டு​விட்டு விஜய் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் ஓடி​விட்​ட​தாக சென்னை உயர் நீதி​மன்​றம் கடுமை​யான கருத்​துகளைத்
தெரி​வித்​துள்​ளது. இந்த வழக்​கில் நியாய​மான விசா​ரணை நடை​பெற​வில்​லை.

தமிழ்நாடு காவல்துறையின் செயல்​பாடு குறித்து அதிருப்தி தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்​றம், அவர்களைக் கொண்டே சிறப்புப் புல​னாய்​வுக் குழு அமைத்​திருப்​பது தவெக​வுக்​குத்​தான் பாதிப்பை ஏற்​படுத்​தும்.

சிலர் முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு நடத்​திய சதி​யின் விளை​வாகவே உயி​ரிழப்பு சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.
உண்​மை​களை வெளியே கொண்​டுவர சுதந்​திர​மான விசா​ரணை தேவை.

எனவே, உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை ஆணையம் அமைத்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டுள்​ளது.

இதை அவசர வழக்​காக விசா​ரிக்க கோரி உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் அமர்​வில் முறையீடு செய்யப்​பட்​டது. இதை ஏற்ற நீதிப​தி​கள், வழக்​கை நாளை வி​சா​ரிப்​ப​தாக தெரி​வித்​துள்​ளனர்​.

ஆதவ் அர்ஜுனா இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதில் விஜய்க்கு உடன்பாடில்லை என்றும் அவரை மீறி ஆதவ்அர்ஜுனா இதைச் செய்திருக்கிறார் என்றும் அக்கட்சி வட்டாரங்களில் ஒரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது.

Leave a Response