செங்கோட்டையன் தலைமையில் புதியகுழு – அரசியல் தலைவர் கருத்து

அ​தி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக​வின் பின்​புலம் உள்​ளது என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார்.

இதுகுறித்து நேற்று, திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது…..

அதி​முக​வில் இருந்து பிரிந்து போனவர்​கள் அனை​வரும் ஒன்​றாக இணைய வேண்​டும் என்று கூறி, அதற்​காக எடப்பாடி பழனிச்​சாமிக்குக் காலக்​கெடு விதித்த முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனை கட்​சி​யில் இருந்து
நீக்​கி​யுள்​ளனர். ஏற்​கெனவே சசிகலா, டிடி​வி.​தினகரன், ஓ.பன்​னீர்​செல்​வம் என பல குழுக்​களாக இருக்​கும்
அதி​முக​வில், புதி​தாக செங்​கோட்​டையன் என்ற குழு உரு​வாக வாய்ப்பு ஏற்​பட்​டுள்​ளது. அனை​வரும் சுயநலப் போக்​குடனே இந்​தப் பிரச்​சினையை அணுகு​வ​தால், இப்​போதைக்கு அதி​முக இணைய வாய்ப்பே கிடை​யாது.

அதி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக பின்​புல​மாக இருந்து செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கிறது. இதை அதி​முக​வில் இருப்​பவர்​கள் உணர வேண்​டும். கொள்கை வேறு, கூட்​டணி வேறு என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமி சொல்​லிக்​கொண்​டிருக்​கிறார். இதனால், பாஜக, அதி​முக கூட்​டணி மேலும் மேலும் பலவீனமடைந்து கொண்​டிருக்​கிறது.

கடந்த 8 ஆண்​டு​களாக 28 விழுக்காடு வரை ஜிஎஸ்டி விதித்து மக்​களைத் துயரத்​துக்கு உள்​ளாக்​கிய பாஜக,
தற்​போது சிறிய அளவு வரியை மட்​டும் குறைத்​துள்​ளது.

தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க.ஸ்டா​லினின் வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்க்​கும் முயற்சி வரவேற்​கத்​தக்கது.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு நாள் வரும் 12 ஆம் தேதி வரு​கிறது. அன்று தமிழ்நாடு முழு​வதும் ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் உடல் தானம் செய்​யத் தீர்​மானித்​துள்​ளனர். இதன்​மூலம் உடல் தானம் குறித்த விழிப்​புணர்​வு ஏற்​படும்​.

இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

இந்தப் பேட்டியில் அதிமுக ஒருங்கிணைய வாட்ப்பில்லை,செங்கோட்டையன் தலைமையில் புதிய குழு உருவாகும் என்று அவர் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது என்கிறார்கள்.

Leave a Response