ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தார் கே.பாக்யராஜ்

சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குநர் பாக்யராஜ் இன்று சந்தித்தார்.

ஓபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பாக்யராஜ் கூறியதாவது…..

அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்.அதற்கு அதிமுகவில் இணைந்து நானும் பணியாற்றவுள்ளேன்.தேவை ஏற்பட்டால் நானே நேரில் சென்று அனைவரையும் ஒருங்கிணைக்கப் பாடுபடுவேன்.ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம்.

திருஷ்டி பரிகாரமாக ஒரு சோதனை வந்துள்ளது. மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும் என நினைத்து ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும். நானும் அதையே தான் கூறி வருகிறேன்.

மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு பழையபடி தொண்டர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் வகையில் செயல்படவேண்டும். அதற்கு என்னை இணைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ? எப்படிச் செயல்பட வேண்டுமோ? அப்படிச் செயல்படத் தயாராக இருக்கிறேன். சின்ன ஒரு தொண்டனாக இவர்கள் உடன் இருந்து கட்சிப் பணிகளை ஆற்றத் தயாராக இருக்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response