கரூர் துயரத்துக்கு விஜய்தான் முழுப்பொறுப்பு – உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைப்பு

கரூரில் தவெக பிர​சா​ரக் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் எதிரொலி​யாக அரசி​யல் கட்​சிகளின்
கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​கோரி வில்​லி​வாக்​கம் தினேஷ் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ரான விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க்
தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தும் உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தவெக தேர்​தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செய​லா​ள​ரான ஆதவ் அர்​ஜூனா
உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி,
என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. தவெக தரப்​பில் மூத்த
வழக்​கறிஞர்​கள் கோபால் சுப்​ரமணி​யம், சி.ஆர்​யமா சுந்​தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.

இந்த வழக்​கில் சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து தனி நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார். வழக்​கில் தொடர்​பில்​லாத விஜய் சம்பவ இடத்​தில் இருந்து பொறுப்​பற்ற முறை​யில் ஓடி​விட்​ட​தாகக் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார். தவெக தரப்​பில் வாதங்​களை முன்​வைக்க வாய்ப்​பும் அளிக்​க​வில்​லை. சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினையை காரணம் காட்டி காவல்துறையினர் தான் அந்த இடத்தை விட்டுச் செல்​லும்​படி விஜய்க்கு உத்​தர​விட்​டனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்​க​வில்​லை.

தனி நீதிப​தி​யின் உத்​தரவு தவெக-​வின் அரசி​யல் எதிர்​காலத்​துக்கு பாதிப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த வழக்கை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரித்து உத்​தர​விட்​டுள்ள நிலை​யில், அதே
காரணத்​துக்​காக தொடரப்​பட்ட வழக்கை சென்னை உயர்நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்து தனி​யாக சிறப்பு
புல​னாய்​வுக் குழுவை அமைத்து உத்​தர​விட்டு இருப்​பது தவறான நடை​முறை. எனவே உச்ச நீதி​மன்​றமே ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்க வேண்​டும்.

இவ்​வாறு வாதிட்​டனர்.

தமிழ்நாடு அரசு தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, பி.​வில்​சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிட்​டனர்.

உயி​ரிழப்பு சம்​பவத்​தில் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்​துள்​ளது. முதலமைச்சர் உடனடி​யாக கரூருக்குச் சென்று உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்களுக்கு ஆறு​தல் தெரி​வித்​தும், காயமடைந்​தவர்​களுக்கு உடனடி
சிகிச்​சைக்​கும் நடவடிக்கை எடுத்​துள்​ளார். உயர்நீதி​மன்ற உத்​தர​வுப்​படி ஏற்​கெனவே சிபிஐ-​யில் பணி​யாற்​றிய
நேர்​மை​யான அதி​காரி​யான வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு விசா​ரணைக்​குழு தனது விசா​ரணையைத் தொடங்​கி​யுள்​ளது.

கூட்​டங்​களை முறைப்​படுத்​தக்​கோரி வழி​காட்டு விதி​முறை​களை வகுக்​கக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்ட நிலை​யில், அதுதொடர்​பான கோரிக்​கையை உயர்நீதி​மன்ற மதுரைக் கிளை
விசா​ரிக்​க​வில்​லை. விஜய் 7 மணி நேரம் தாமத​மாக கரூருக்கு வந்​த​தால்​தான் இந்த துயரச்​சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. இதற்கு விஜய் மட்​டுமே தார்​மீகரீ​தி​யாக பொறுப்​பேற்க வேண்​டும். அதை​விடுத்து காவல்துறையினர் மீது குற்​றம்​சாட்டி அரசி​யல் சாயம் பூசக்​கூ​டாது.

இவ்​வாறு வாதத்​தில் தெரி​வித்​தனர்.

அப்​போது நீதிப​தி​கள், கரூர் கூட்ட நெரிசல் தொடர்​பான வழக்கை உயர்நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் இரு
நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது, சென்னை உயர்நீதி​மன்​றத்​தி்ல் தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் எனவும், இந்த இரு உத்​தர​வு​களும் ஒன்​றுக்​கொன்று முரண்​பா​டாக உள்ளன என்​றும், ஒரே​நாளில் வெவ்​வேறு உத்​தர​வு​கள்
பிறப்​பித்​தது எப்​படி என்​றும் கேள்வி எழுப்​பினர்.

கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த சிறு​வனின் தந்தை பன்​னீர்​செல்​வம் தரப்​பிலும் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் தரப்​பிலும் ஆஜரான வழக்​கறிஞர்​கள், ‘‘கரூர் சம்​பவத்​துக்கு காவல்துறையினரின் அஜாக்​கிரதையே காரணம். இரவோடு இரவாக 41 உடல்களுக்கும் பிரேத பரிசோதனை நடத்தி முடிக்​கப்​பட்​டது. ஒரு​புறம் தனி நபர் ஆணை​யம், மறு​புறம் சிறப்பு புல​னாய்​வுக்​குழு விசா​ரணை என தெளிவற்ற நிலை​யில் விசா​ரணை செல்​கிறது. செயற்கை மின்​தடை, சமூக விரோ​தி​களின் குழப்​பம் காரண​மாக பலர் இறந்​துள்​ளனர். ஆளுங்​கட்​சி​யைச் சேர்ந்த முக்​கிய நபர் ஒரு​வருக்​கும் தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ளது. எனவே​தான் சிபிஐ விசா​ரணை கோரு​கிறோம் என்​றனர்.

அனைத்துத் தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், இந்த வழக்​கில் தமிழ்நாடு அரசு தரப்​பில்​ பிர​மாணப் பத்​திரம்​ தாக்​கல்​ செய்​ய உத்​தர​விட்​டு தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளிவைத்​தனர்

Leave a Response