‘இரட்டைக்குதிரை’ சவாரிக்கு கரு.பழனியப்பனை ஊக்கப்படுத்திய சீமான்..!


‘மந்திரப்புன்னகை’ படத்துக்குப் பிறகு தற்போது ‘கள்ளன்’ படத்தின் மூலம் மீண்டும் நாயகன் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். அப்படியென்றால் டைரக்சனை ஒதுக்கி விட்டாரா..? இல்லை அதுவும் இன்னொரு பக்கம் நடந்துகொண்டு இருக்கிறது. ‘கள்ளன்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு கிராமபோன்’ என்கிற படத்தை இயக்கியும் வருகிறார்.

எதற்காக நடிப்பை விட மறுக்கிறார்..? சில வருடங்களுக்கு முன் சேரனை வைத்து இவர் இயக்கிய ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘தம்பி இந்தப் படத்துல நீ நடிச்சிருக்கணும்டா!’ என்று இயக்குநர் சீமான் பாராட்டியுள்ளார். பலருக்கும் அவ்வளவு சுலபத்தில் அமையாத அந்த நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையும்போது விடவேண்டாம் என்று தோன்றியதால் சீமான் சொன்னதும் சரியாகவே பட்டதாம் கரு.பழனியப்பனுக்கு.. அதுதான் நடிப்பு, டைரக்சன் என இரட்டைக்குதிரை சவாரி செய்ய ஆரம்பித்துவிட்டார் கரு.பழனியப்பன்.

Leave a Response