முதல்வர் என்றால் மு.க.ஸ்டாலின்தான் – விஜய் ஒப்புதல்?

தமிழ்நாடு அரசுப்பள்​ளி​களில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை பயிலும் குழந்​தைகளுக்கு காலை சிற்​றுண்டி வழங்​கும் நோக்​கத்​தில் முதல்​வரின் காலை உணவுத் திட்​டம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 செப்​டம்​பர் 15 ஆம் தேதி தொடங்​கிவைத்தார்.தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு இத்​திட்​டம் விரி​வாக்​கம்
செய்​யப்​பட்​டது.இந்​தத்திட்​டத்​தின்​கீழ் கிச்​சடி,பொங்​கல்,உப்​புமா என தின​மும் ஏதேனும் ஒருவகை உணவு​
வழங்​கப்​பட்டு வரு​கிறது.தற்​போது தமிழ்நாடு முழு​வதும் உள்ள 37,447 அரசு,அரசு உதவி​பெறும் பள்​ளி​களில்
படிக்​கும் 19.34 இலட்​சம் குழந்​தைகளுக்​குக் காலை உணவு வழங்​கப்​பட்டு வரு​கிறது.

சமூக நலத்​துறை செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்னை
தலை​மைச்செயல​கத்​தில் ஜூன் 15 ஆம் தேதி நடை​பெற்​றது.இதில் காலைஉணவுத் திட்​டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்​களுக்​கும் விரி​வாக்​கம் செய்​வதற்கு முடி​வானது.இந்​நிலை​யில் காலைஉணவுத்
திட்​டத்​தின் பெயர் மாற்​றப்​பட்​டு,அதை விரி​வாக்​கம் செய்​வதற்​காக ரூ.217 கோடி நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து,சமூக நலத்​துறைச் செயலர் ம.பல்​லவி பல்​தேவ் வெளி​யிட்ட அரசாணையில்…

அரசு,அரசு உதவிபெறும் பள்​ளி​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் காலைஉணவுத் திட்​டம் இனி ‘பெருந்​தலை​வர் காம​ராஜர் காலைஉணவுத் திட்​டம்’ என்று பெயரிடப்​படு​கிறது.இத்​திட்​டம் 6 முதல் 8 ஆம் வகுப்​பு​களுக்கு
விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது.இத்திட்டம் பெரி​யாரின் பிறந்​த​நாளான செப்​டம்​பர் 17 ஆம் தேதி முதல்​வர்
விஜய்​யால் தொடங்கி வைக்​கப்பட உள்​ளது.தமிழகம் முழு​வதும் 15,454 அரசு மற்​றும் அரசு உதவிபெறும்
பள்​ளிகளில் பயிலும் 15 இலட்​சத்து 14,274 மாணவர்​கள் பயன்​பெறு​வார்​கள்.

இந்​தத்திட்​டத்தை விரிவுபடுத்​து​வதற்​காக,நடப்பு நிதி​யாண்​டில்​(2026-27) தொடர் செல​வின​மாக ரூ.204 கோடி​யும், தொடரா செல​வின​மாக (உபகரணங்​கள் வாங்​குதல்) ரூ.13.57 கோடி​யும் என ஒட்​டுமொத்​த​மாக ரூ.217.63 கோடிக்கு நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.ஒவ்​வொரு மாணவருக்​கும் தினசரி காலைஉணவுச் செல​வாக ரூ.12.71 நிர்​ண​யம்
செய்​யப்​பட்​டுள்​ளது.சென்னை மாநக​ராட்​சி​யில் ஆணை​யரக​மும்,பிற மாநக​ராட்​சிகள் மற்​றும் நகராட்​சிகளில் நகராட்சி நிர்​வாக இயக்​குநரக​மும் ஒருங்​கிணைந்த சமையல் கூடங்​கள் வாயி​லாக செயல்​படுத்​தப்​படும்​.

மேலும்,ஊரகப் பகு​தி​களில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் அந்​தந்​தப் பள்​ளி​களி​லேயே காலைஉணவு தயாரிக்​கப்​பட்டு வழங்​கப்​படும்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்​ளது.

மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது,முதல்வரின் காலைஉணவுத்திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.இப்போது பெருந்தமிழர் காமராசர் காலைஉணவுத்திட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.இதனால்,இப்போதும் முதல்வர் என்றார் மு.க.ஸ்டாலின் தான் என்கிற எண்ணம் முதல்வருக்கே வருகிறது.அதனால்தான் பெயரை மாற்றிவிட்டார்கள் என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response