ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு,ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டதாகவும் ஜெய் ஹிந்த் என இந்திய ராணுவம் பதிவு.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாத முகாம்கள் மீது குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தாக்குதலுக்கு தயார் என்றும், வெற்றிக்கான பயிற்சி என்றும் இந்திய ராணுவம் வீடியோ பதிவு வெளீயிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல். மேலும் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவமும், இந்திய விமானப்படையும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காலை 10 மணிக்கு முழுவிவரம் தெரியவரும் என இந்தியராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.