
மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய்யை, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்ததற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….
2013 இல் தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறக்க மறுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தார்.இதையடுத்து,உச்சநீதிமன்ற உத்தரவின்படி,கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்றார்.அப்போது,தமிழகத்தில் நிலவும் வறட்சியைச்
சுட்டிக்காட்டி,கர்நாடகம் தண்ணீர் தரவேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார்.ஆனால்,தண்ணீர் திறக்க இயலாது என அப்போது கர்நாடகமுதல்வராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் மறுத்துவி்ட்டார்.
அதன்பின்,இந்தப் பேச்சுவார்த்தை குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்தது.அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்,இனி காவிரி குறித்து எந்த ஒருபேச்சுவார்த்தையிலும் கர்நாடகம்,தமிழகம் தனிப்பட்ட முறையில் ஈடுபடக்கூடாது எனவும்,தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதன்பின்,பிரதமர் உத்தரவின் பேரில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இந்தநிலையில்,காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு
விடுத்துள்ளார்.இது மேகதாது அணை கட்ட எடுக்கும் முயற்சியை நியாயப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் நயவஞ்சக நடவடிக்கையாகும்.
மேலும்,பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வருக்கு கர்நாடக முதல்வர் அழைப்பு விடுத்திருப்பது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது ஆகும்.எனவே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் அழைப்பை தமிழக முதல்வர் விஜய் நிராகரிக்க வேண்டும்.காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே காவிரி நீர் தொடர்பாக முடிவெடுக்க
முடியும்.ஆணையத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு மாநிலமும் காவிரி நீரை பகிர்ந்தளிக்கவும்,அணை
கட்டுமானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் இயலாது என்பதை உணரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


