அதிமுக பாஜக கூட்டணிக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் 2026 தேர்தல் கூட்டணி குறித்துக் கூறியதாவது….

கடந்த தேர்தலில் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்தோம். தற்போது அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் உள்ளன.

வரும் டிசம்பரில் நடக்கும் எங்கள் கட்சியின் மாநில மாநாட்டிற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்போம். அதிமுக கூட்டணியில் நான்கைந்து கட்சிகள் இருந்தன. கூட்டணிக் கட்சியினருடன் ஆலோசனை நடத்தாமல், அவர்கள் பாஜகவோடு கூட்டணியில் இணைந்து விட்டனர். எங்கள் மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை தெளிவாக அறிவிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் சில நாட்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியின்போது,

2026 இல் புதிய தமிழகம் கட்சியின் முழக்கமே ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தான். ஆட்சியில் பங்கு என யார் கூட்டணி அமைக்கிறாரோ அவருடைய கூட்டணியில் தான் சேர்வோம். 2026 இல் வெறும் கூட்டணி மட்டுமில்லாமல் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதை அடிப்படையாக வைத்துத் தான் கூட்டணியை அமைப்போம். கூட்டணி குறித்து இப்போது முடிவெடுக்க இயலாது. தேர்தல் நெருங்கும் போது யார் கூட்டணி ஆட்சி என விளக்குகிறாரோ அவரோடு தான் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க இயலும் என்று கூறியிருந்தார்.

நேற்று,எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிமுக பாஜகவுடன் சேர்ந்துவிட்டது என வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதிலிருந்து, அதிமுக பாஜக கூட்டணியில் அவருக்கு விருப்பம் இல்லை என்றும் இருவரும் எதிரெதிராக இருந்திருந்தால் இருவரில் ஒருவரோடு ஆட்சியில் பங்கு என்கிந நிபந்தனையோடு கூட்டணி அமைத்திருக்கலாம்,இப்போது அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்பதால் அவர் செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறார். அதனால் இப்போது விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா? என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response