ரஜினி வசனத்தைப் பேசிய மோடி – மக்கள் அச்சம்

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பிரபாத் தாரா மைதானத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

நாட்டின் இரண்டாவது மல்டி-மாடல் நீர்வழி முனையத்தை சாஹிப்கஞ்சில் நாட்டிற்காக அர்ப்பணித்தார். புதிதாக கட்டப்பட்ட மாநில சட்டமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

மேலும் ராஞ்சியில் புதிய மாநில செயலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இவை தவிர, கிசான் மான் தன் யோஜ்னா, குத்ரா வியாபாரி டுகந்தர் ஸ்வரோஜ்கர் ஓய்வூதிய திட்டம் மற்றும் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளித் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

அங்கு பிரதமர் பேசும்போது கூறியதாவது…

ஏழை மக்களின் பணத்தைச் சூறையாடியவர்களை சரியான இடத்திற்கு அனுப்புவதே எனது அரசாங்கத்தின் உறுதிப்பாடு. சிலர் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர். கடந்த 100 நாட்களில் நாடு டிரைலரை மட்டுமே பார்த்து உள்ளது. அதே நேரத்தில் முழு படமும் இனிமேல் தான் காட்டப்பட உள்ளது. (இது ரஜினி பேசிய வசனம் என்பது குறிப்பிடத்தக்கது)

தாங்கள் நாட்டிற்கு மேலானவர்கள் என்று நினைத்தவர்கள் தற்போது நீதிமன்றங்களைச் சுற்றிவருகிறார்கள்… இன்று நாடு ஒருபோதும் காணாத வேகத்துடன் முன்னேறி வருகிறது எனக் கூறினார்.

பிரதமரின் இந்தப் பேச்சுக்கு, டிரெய்லரே இவ்வளவு மோசமா இருந்தா முழுப்படமும் எப்படி இருக்குமோ? என்று மக்கள் அச்சப்படுகின்றனர்.

Leave a Response