ஒன்றிய அரசின் இந்தித்திணிப்பை ஏற்கமாட்டோம் – அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்​கை​யில் பிஎம்​ஸ்ரீ பள்​ளித் திட்​டம் இடம்​பெற்​றுள்​ளது.இந்தத் திட்​டத்​தில்
மும்​மொழிக் கொள்கை என்கிற பெயரில் இந்தித்திணிப்பு இருப்​ப​தால் தமிழ்நாடு இதில் இணைய மறுத்​து​விட்​டது.முந்தைய திமுக அரசு இதில் உறுதியாக இருந்த காரண​த்தால், ஒருங்​கிணைந்த பள்​ளிக் ​கல்​வித் திட்​டம்
மூல​மாக தமிழ்நாட்டுக்குத் தரவேண்​டிய சுமார் ரூ.3,500 கோடியை வழங்​காமல் ஒன்றிய அரசு நிறுத்தி
வைத்​துள்ளது.

இது கடந்த திமுக ஆட்​சி​யில் பெரும் சர்ச்​சை​யானது.இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில்,
ஒன்றிய கல்வி அமைச்​சகம் சமீபத்தில் தமிழக அரசுக்கு மீண்​டும் ஒரு கடிதம் எழு​தி​யது. பிஎம்ஸ்ரீ பள்​ளித்
திட்​டத்​தின்​கீழ் பள்​ளி​களை மேம்​படுத்த உடனடி​யாக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

தவெக தலை​மை​யில் புதிய அரசு பதவியேற்ற சூழலில் மத்​திய அரசு இந்தக் கடிதத்தை அனுப்​பியது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இந்த விவ​காரத்​தில் தவெக என்ன முடி​வெடுக்​கும், முந்​தைய திமுக அரசு ​போல எதிர்ப்பு தெரிவிக்​குமா? அல்​லது ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​மா? நிறுத்தி வைக்​கப்​பட்ட கல்விக்​கான நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெற என்ன மாதிரி​யான நடவடிக்கை எடுக்​கும்? என பல கேள்வி​கள் எழுந்​தன.

இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது….

கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வந்துசேரவில்லை.இது மாணவர்களுக்கானது.எந்தக் காரணத்துக்காகவும் அதை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேசமயம் எந்தவித மறைமுக அழுத்தத்துக்கும் நாங்கள் அடிபணிபவர்கள் கிடையாது.கொள்கை சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.இருமொழிக் கொள்கை என்பது கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை.அதில் மாற்றுக் கருத்தே கிடையாது என்று கூறினார்.

Leave a Response