ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு பேரில் அறிவியல் விருது அறிவிப்பு

ஈரோடு புத்தகத் திருவிழா “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஈரோடு வ உ சி பூங்காவில் நடத்தப்படுகிற்து.

2016 ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா ஆகஸ்ட் 5 ஆம் நாள் தொடங்கவிருக்கிறது. இவவாண்டு முதல், மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்ஒருவருக்கு ‘அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது’ என்ற விருது வழங்கப்படவுள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ளா செய்திக்குறிப்பில்….

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்ஒருவருக்கு ‘அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது’ என்ற விருது வழங்கப்படவுள்ளது.விருதாளர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய அறிவியல்கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும்.

இது மாநிலந்தழுவிய விருது என்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களைச்சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளப்படுவர்.

அறிவியல் துறையில் ஆழத்தடம் பதித்த வல்லுனர்களாக விளங்கும் ஐந்து தகுதிபெற்ற அறிவியல் அறிஞர்களின் தலைமையில் ஒரு தேர்வுக்குழு அமைகப்பட்டுள்ளது.

இக்குழுவினரால் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கே இவ்விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விருது பாராட்டுக் கேடயத்துடன் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையையும்
உள்ளடக்கியதாகும். விருதுத் தொகையை எம்.ஏ. முகமது முஸ்தபாவை நிறுவனராக்கொண்ட ‘சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ’ வழங்குகிறது.

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலுள்ள ஆய்வுகூடங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆய்வுக்கூடங்களிலோ ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். ஆய்வின் சுருக்கத்தையும், பெயர்பெற்ற அறிவியல்இதழ்களில் வெளியான தனது 10 மிகச்சிறந்த கட்டுரைகளின் சுருக்கத்தையும் பரிசீலனைக்கு ஆய்வாளர் அனுப்பிவைக்க வேண்டும்.

எந்தக் கண்டிபிடிப்புக்கு ஆய்வாளர் விருதுக்குரியவராக விளங்குகிறார் என்பதைச்
சுக்கமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கவேண்டும். இவ்விபரங்களை ஆய்வாளர் நேராகவும் ஆய்வாளருக்காக மற்றவரும் அனுப்பிவைக்கலாம்.

இவ்விருது ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளாம் 16.08.2016 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிற நிறைவு நாள் நிகழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் (இஸ்ரோ ) இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களால் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் அறிவியல் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் விதத்திலும் இன்னும் பல
இளைஞர்களை புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளில் ஈடுபடத் தூண்டும் முறையிலும் மக்கள்சிந்தனைப் பேரவை இவ்விருதை அறிவித்துள்ளது.

ஆய்வுக்குறுப்புகளையும் தொடர்புள்ள அனைத்து அவசியப்படும் ஆவணங்களையும்அனுப்பிவைக்கவேண்டிய கடைசி தேதி 05.08.2016 ஆகும்.
www.makkalsinthanaiperavai.org என்ற இணையதளத்தில் இவை பற்றிய
முழுவிபரங்கள் உள்ளன.

முகவரி : மக்கள் சிந்தனைப் பேரவை, A- 38, சம்பத் நகர், ஈரோடு –
638 011. மின்னஞ்சல் : info@makkalsinthanaiperavai.org . தொலைபேசி எண்கள் :
0424 2269186, 88835 25553.

என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து.

Leave a Response