
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். காரைக்குடி புதிய பேருந்து நிலையம், ஐந்துவிளக்கு, பழைய பேருந்து நிலையம்
உள்ளிட்ட இடங்களில் சீமான் பரப்புரை செய்தார்.பரப்புரையின் இறுதிநாளான நேற்று, தனது தொகுதிக்கு உட்பட்ட செக்காலை ரோடு என்ற இடத்தில் பரப்புரையை அவர் நிறைவு செய்தார்.
அந்தக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது…..
மக்களில் 95 விழுக்காட்டினர் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர். செல்வந்தர்கள் ஐந்து விழுக்காடுதான் உள்ளனர்.
செல்வந்தர்கள்தான் இன்றைய நிலையில் பணத்தை வாரி இறைத்து ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.ஐந்து விழுக்காடே உள்ள செல்வந்தர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையை மாற்றவேண்டும்.செல்வந்தர்கள்,முதலாளிகள் மட்டுமே அதிகாரத்துக்கு வரமுடியும் என்றால் அது ஜனநாயகம் இல்லை.ஓட்டுக்கு நோட்டு;அது நாட்டுக்கு வேட்டு.
தேர்தல் நேரத்தில் மட்டும் அதிமுக, திமுகவுக்கு மக்கள் மேல் பாசம் வருகிறது. இருகட்சிகளும் போட்டிபோட்டு இலவசங்களை அறிவித்துள்ளன. பெண்களைக் குறி வைத்து திமுக, அதிமுக ரூ.2,000 பணம் தருவோம் என்று அறிவித்தால், என் தம்பி விஜய் ரூ.2,500 தருவோம் என்று அறிவிக்கிறார். விஜய் தனது மனைவிக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 கொடுப்பாரா? ரூ.8,000 கூப்பன் கனிமொழி, துர்கா ஸ்டாலினுக்குக் கொடுக்கப்படுமா?
இலவசத்துக்கான பணத்தை எங்கிருந்து எடுத்துக் கொடுப்பீர்கள். நாட்டைத்தான் அடமானம் வைக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் வேலை இல்லை; உழைப்பு இல்லை; வருவாய் இல்லை; ஆனால், இலவசம் மட்டும் இருக்கிறது. இலவசங்களால் பொருளாதாரம் சிதைந்து நாடு சீரழிந்து போகும். மேலும் பெரும் கலவரத்தைச் சந்திக்கும்
சூழ்நிலை ஏற்படும்.
இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்று எதிர்காலத்தில் தமிழ்நாடு பெரியபுரட்சியைச் சந்திக்கும்.அதற்கு நான் தலைமை தாங்குவேன்.குடும்ப அட்டைக்கு ரூ.2,000 கொடுத்துவிட்டு, ரூ.2 இலட்சம் கடனை நம் மீது
திணிக்கின்றனர். நாங்கள் மக்கள் நலனுக்காகக் களத்தில் நிற்கிறோம்.எங்களுக்கு வாக்களிப்போர் வாக்காளர்கள் அல்ல;புத்தம் புதிய அரசியலைக் கண்ட புரட்சியாளர்கள்.உங்களை ஏமாற்ற வேண்டும் எண்ணம் எங்களுக்கு
இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.


