ஒரு வாரம் மாவீர்ர் நாள் கொண்டாடுகிறது நாம்தமிழர்கட்சி

          தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மாவீரர்நாள் ஆண்டுதோறும்  நாம்தமிழர்கட்சி சிறப்பாகவும் எழுச்சியுடனும் கொண்டாடிவருகிறது.

இவ்வாண்டு நிகழ்ச்சிகள் பற்றி. அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

நவம்பர் 26 தேதி அன்று கொண்டாடவேண்டிய எங்கள் உயிராகவும் மூச்சாகவும் அறிவாகவும் ஆற்றலாகவும் எல்லாமுமாகவும் இருக்கும் எங்கள் மாசற்ற தலைவனின் பிறந்தநாளை இன்றிலிருந்தே தொடங்குகிறோம்.. 26 வரை தொடர்ந்து தமிழகம் முழுக்க நடத்துகிறோம்.. ஊருக்கு ஊர் நடத்துகிறோம்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கலந்துகொள்ளும் கூட்டங்கள்….

20.11.14(இன்று) >கொரட்டூரில் தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம்.
21.11.14 >விருகம்பாக்கத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் உள்ளரங்க கூட்டம்.
22.11.14>வேளச்சேரியில் தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம்.
23.11.14>மாதவரத்தில் நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுமக்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து,பேசுதல்.
24.11.14>வண்ணாரப்பேட்டையில் தலைவர் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம்.
25.11.14>கொளத்தூர் பெரியார் நகரில்,தலைவர் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம்.
26.11.14>சென்னை ராஜா கடை பகுதியில் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கௌரவிக்கும் உள்ளரங்க கூட்டம்.

வாருங்கள் தமிழர்களே.

Leave a Response