நவம்பர் 1 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு நடதுகொண்டேயிருக்கிறது.நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த விலை உயர்வை மனசாட்சியில்லாமல் மோடி நடத்திக்கொண்டேயிருக்கிறார்.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.106.04க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.102.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.106.35க்கும் மற்றும் டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.102.59க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response