16 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு – மோடி நாசமாப் போக என மக்கள் சாபம்

கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் நாள் தோறும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திவருகிறது ஒன்றிய அரசு.

நேற்று முன் தினம், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.102.40க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.98.26க்கு விற்பனை ஆனது.

பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது.

நேற்று, பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆகவும், டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01-ஆகவும், டீசல் ரூ.98.92-க்கும் விற்பனையாகிறது.

நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 ஆவது முறையாக உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடிக்கு மக்கள் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Response