தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மூவரின் தண்டனைக் காலமும் நிறைவடைய உள்ள நிலையில், சசிகலாவும் இளவரசியும் கடந்த நவம்பரில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர். சுதாகரன் இன்னும் சில தினங்களில் அபராதத்தைச் செலுத்த உள்ளார்.
இதனிடையே சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கடந்த மாதம் சசிகலா அபராதம் செலுத்தியதற்கான நீதிமன்ற ஆவணங்களை சிறைக் கண்காணிப்பாளரிடம் தாக்கல் செய்தார். மேலும் அவரை விடுதலை செய்யும் தேதி குறித்து முன்கூட்டியே தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையின் தகவல் தொடர்புஅதிகாரி லதா நேற்று ராஜா செந்தூர் பாண்டியனுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,”சசிகலா உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அபராதத்தை செலுத்தி, 4 ஆண்டு சிறை தண்டனையையும் நிறைவு செய்துள்ளதால் சனவரி 27 ஆம் தேதி காலையில் விடுதலைசெய்யப்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இதன்மூலம் சனவரி 27 அன்று சசிகலா விடுதலையாவது உறுதியாகியிருக்கிறது.