சகலகலா வல்லவன் ம.நடராசன் – நாஞ்சில் சம்பத் இரங்கல்

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அதன்பின் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று (மார்ச் 20,2018) காலமானார். அதிகாலை ஒன்றரை மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. அவ்ருக்கு வயது 74.

சென்னை பெசண்ட்நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நாஞ்சில்சம்பத் எழுதியுள்ள இரங்கல் குறிப்பில்,

இனத்திற்கும் மொழிக்கும் கையெழுத்தாகி காலமெல்லாம் காவியம் செய்தவர் அண்ணன் ம. நடராஜன். தமிழீழக் கொள்கையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற சகலகலாவல்லவன் நடராஜன். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கத்தின் உந்துவிசையாக இருந்தவர். நாலாவது தமிழீழப் போரில் மடிந்த மாவீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ராஜராஜசோழன் காலமாகிவிட்டார். அவரை இழந்து தவிக்கிற எங்கள் சின்னம்மாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response