ரவிச்சந்திரன் பேத்திக்கு கைகொடுக்குமா கருப்பன்..!


சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமானவர் தன்யா. நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர் அதையடுத்து அருள்நிதி நடித்த பிருந்தாவனம் படத்தில் நடித்தார். முதல் இரண்டு படங்களும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இப்போது விஜயசேதுபதியுடன் கருப்பன் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார் தன்யா.

அந்த இரண்டு படங்கள் கொடுக்காத வெற்றியை இந்த படம் கொடுக்கும் என்று கூறும் தன்யா, இந்தப்படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்திருப்பதே தனக்கு வெற்றிதான். என கூறும் தன்யா, இந்த படத்திற்கு பிறகு நானும் முன்னணி நடிகையாகிவிடுவேன் என்கிறார்.

இந்த படத்தில் அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் மதுரை பெண்ணாக மாறி நடித்துள்ளாராம். ஆனால் இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களிலும் இவரே தனக்கு டப்பிங் பேசிக்கொண்டாலும் கூட, இந்தப்படத்தில் டப்பிங் பேசவில்லையாம். காரணம், இந்த படம் பக்கா மதுரை மண்வாசனை கதையில் உருவாகியிருக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்த என்னால் மதுரை தமிழை சரியாக பேச முடியவில்லை என்பதால் இவருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுதான் குரல் கொடுத்திருக்கிறாராம்.

Leave a Response