தமிழ்நாடு இறுதிவாக்காளர் பட்டியல் வெளியீடு – விவரம்

தமிழ்நாடு சட்​டப்​பேர​வைப் பொதுத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு ஏப்​ரல் 23 ஆம் தேதி நடை​பெறுகிறது.
வேட்புமனுத் தாக்​கல் மற்​றும் மனுக்​கள் பரிசீலனை முடிந்​துள்ள நிலை​யில், நாளை இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்படவுள்​ளது.

இந்​நிலை​யில்,தேர்​தலுக்​கான ஏற்​பாடு​கள் குறித்து தமிழ்நாடு தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் கூறிய​தாவது….

தற்​போது தமிழ்நாடு முழு​வதும் உள்ள 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் அமைந்​துள்ள
பள்​ளிக்கட்​டிடங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் தண்​ணீர், கழிப்​பறை மற்​றும் சாய்​தளம் போன்ற அடிப்​படை வசதி​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

தமிழ்நாடு முழு​வதும் 3,022 வாக்​குச்​சாவடி மையங்​களில் உள்ள 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​றம் மற்​றும் மிக​வும் பதற்​ற​மானவை பட்​டியலில் உள்​ளன. கடந்த தேர்​தல்​களை விட தற்​போது எண்​ணிக்கை குறைந்​துள்​ளதுடன்
இடங்​களும் மாறியுள்​ளன.

கடைசி​யாகக் கண்​டறியப்​படும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் எண்​ணிக்​கை​யில் துணை இராணுவப்படையினர் நியமிக்​கப்​படு​வார்​கள்.தவிர நுண் பார்​வை​யாளர்​கள்,வெப் கேம்,வீடியோ பதிவுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. ஒரேஇடத்​தில் 10 க்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் இருந்​தால் அங்கு துணை இராணுவப் படை​யினர் அதி​கள​வில் நிறுத்​தப்​படு​வார்​கள். தமிழ்நாட்டுக்கு ஒதுக்​கப்​பட்ட துணை இராணுவப் படை​யினர்
ஏப்​ரல் 13 ஆம் தேதிக்​குள் வந்​து​விடு​வார்​கள்.

தமிழ்நாட்டில் வாக்​குப்​ப​திவுக்குத் தேவை​யான மின்​னணு வாக்​குப்​ப​திவு,விவி​பாட் இயந்​திரங்​கள் 120 சதவீதத்​தைத் தாண்​டி​யும் இருப்பு உள்​ளது.இந்​தத்தேர்​தலுக்கு ரூ.1,302 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.2024 நாடாளு​மன்​றத்
தேர்​தலின்போது ரூ.1,009 கோடி,முந்​தைய 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்போது ரூ.795 கோடி செல​வானது.

‘சி விஜில்’ செயலி மூலம் பெறப்​படும் புகார்​களுக்​கு, 100 நிமிடங்​களுக்​குள் தீர்வுகாண நடவடிக்​கைகள்
எடுக்​கப்​படு​கின்​றன.இது​வரை இந்​தச் செயலி​யில் 2,364 புகார்​கள் பெறப்​பட்​டுள்​ளன.அதேபோல்,தொலைபேசி
வாயி​லாக 43,220 புகார்​கள் வந்​துள்​ளன.இவற்​றின் மீது உடனடி​யாக நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்​காளர் சரி​பார்ப்​புப் பணி​கள் முடிந்து பிப்ரவரி 23 ஆம் தேதி இறுதி வாக்​காளர்​கள்
பட்​டியல் வெளி​யானது.அப்​பட்​டியலின்​படி, 2,77,38,925 ஆண், 2,89,60,838 பெண், 7,617 இதர வாக்​காளர்​கள் என மொத்​தம் 5,67,07,380 வாக்​காளர்​கள் இடம்​பெற்​றிருந்​தனர். இதில் 18 முதல் 19 வயதுக்கு உட்​பட்ட வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 12.51 இலட்​சம். மாற்​றுத்​திற​னாளி​கள் என குறிக்​கப்​பட்ட வாக்​காளர்​கள் 4.63 இலட்​சம், 85 வயதுக்கு மேற்​பட்ட மூத்த குடிமக்​கள் 8.99 இலட்​ச​மாக உள்​ளனர்.

வாக்​காளர் பட்​டியலில் இடம்பெறாதவர்​கள்,பெயர் விடு​பட்​ட​வர்​கள்,பெயர் சேர்த்​தல்,நீக்​கம் செய்​தல்
உள்​ளிட்​ட​வற்​றுக்கு மனுக்​கள் பெறப்​பட்​டன.வழக்​க​மாக,வேட்புமனுத் தாக்​கல் முடி​யும் நாளில் கூடு​தல் வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும்.

அந்தவகை​யில் வாக்​காளர் பட்​டியலைத் தமிழ்நாடு தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று
இணை​யதளத்​தில் வெளி​யிட்​டார்.அதன்​படி, தமிழ்நாடு முழு​வதும் 2 கோடியே 80 இலட்​சத்து 30,658 ஆண்​கள், 2 கோடியே 93 இலட்​சத்து 4,905 பெண்​கள், 7,728 3 ஆம் பாலினத்​தவர் என 5 கோடியே 73 இலட்​சத்து 43,291
வாக்​காளர்​கள் உள்​ளனர். இதன்​படி, பிப்​ரவரி 23 ஆம் தேதி வெளி​யான இறுதி வாக்​காளர் பட்​டியலை விட 6
இலட்​சத்து 35,911 வாக்​காளர்​கள் அதி​கம் உள்​ளனர். அத்​துடன் 19-20 வயதுடைய வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 14 இலட்​சத்து 59,039 ஆகவும், 80 வயதுக்கு மேற்​பட்ட வாக்​காளர் எண்​ணிக்கை 10 இலட்​சத்து 62,752 ஆகவும்
உயர்ந்​துள்​ளது.

Leave a Response