
தயாரிப்பாளர் தீபன் பூபதி – தொழில்முனைவோர் நிவேதிதா கிரி திருமணம்: ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினர் முன்னிலையில் இனிதே நடந்தது!
தமிழ்த்திரைப்படத் துறையில் தனித்துவமான படைப்புகளை ஆதரித்து வரும் தயாரிப்பாளர் தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோரும்,டாட்டூ கலைஞருமான நிவேதிதா கிரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற எளிய குடும்பவிழாவில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
மிகவும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமண விழா, பாரம்பரிய சடங்குகள் மற்றும் குடும்ப மூத்தோரின் ஆசீர்வாதங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.ஆடம்பர கொண்டாட்டங்களைத் தவிர்த்து,குடும்பத்தின் மகிழ்ச்சியையும் உறவுகளின் அன்பையும் மையமாகக் கொண்ட தனிப்பட்ட நிகழ்வாக இந்த திருமணம் அமைந்தது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் பயணித்து வரும் தீபன் பூபதி,கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தரமான திரைப்படங்களை தயாரிப்பதில் பெயர் பெற்றவர்.விஜய் சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் பெரும் கவனம் பெற்றார்.அந்த திரைப்படம் தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகளில் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று பாராட்டுகளை குவித்தது.
புதிய முயற்சிகள்,வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் தரமான படைப்புகளை ஆதரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தயாரிப்பாளர்களில் தீபன் பூபதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிவேதிதா கிரி,தொழில்முனைவோராகவும், டாட்டூ கலைஞராகவும் தனக்கென ஒரு வெற்றிகரமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.தனது படைப்பாற்றல்,தொழில்முறை அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் துறையில் மதிப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார்.
திருமண நிகழ்வைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்ட தம்பதியருக்கு,திரையுலகினர்,தொழில்துறை நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படத் துறையில் சாதனை படைத்து வரும் தீபன் பூபதியும்,தொழில்முனைவு உலகில் முன்னேறி வரும் நிவேதிதா கிரியும் தங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடனும், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நல்வாழ்த்துகளுடனும் தொடங்கியுள்ளனர்.
புதுமணத் தம்பதியினர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார்ந்த வாழ்த்துகள்.
– சதீஷ்


