உபரி நீரை திறந்துவிட்டு கணக்கு காட்டுவதை ஏற்கமுடியாது – அமைச்சர் திட்டவட்டம்

நேற்று,சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது….

தமிழக முதல்வர் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக முன்னாள் முதல்​வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.முதல்வரை தனிமைப்படுத்த வேண்டும் என்றே,கர்நாடக முதல்வருடன் சேர்ந்து திமுக செயல்பட்டதுபோல தெரிகிறது.கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும்,திமுக குடும்பத்துக்கும் நெருங்கிய உறவு உள்ளது.காங்கிரஸ் தலைமையைவிட திமுக தலைமை சொல்வதைக் கேட்டுதான் சிவகுமார் செயல்படுவார்.தவெக எம்​எல்​ஏக்​களை விலைக்கு வாங்க முயற்​சித்த விவ​காரத்​தில்,பிடிபட்ட பெரும்​பாலான பணம்,பெங்​களூரு​வில் இருந்து தமிழகத்​துக்கு வந்​தவை. ஜெயலலிதா ஆட்​சிக்காலத்​தில் அவருக்கு நல்லபெயர் கிடைக்​கக்கூடாது என்று பல வகை​களில் முட்​டுக்​கட்டை போட்​டார் கருணாநி​தி.

அதே​போல​தான் திமுக இப்​போதும் செய்​கிறது.காவிரி விவ​காரத்​தில் தீர்வு காண முதல்​வர் விஜய் பலவழிகளில் முயற்சி மேற்​கொண்​டாலும்,திமுக கர்​நாடக முதல்​வருடன் இணைந்து முட்​டுக்​கட்டை போட்டு வரு​கிறது.காவிரி பிரச்​சினை​யில் கடந்த 30 ஆண்​டு​களாக திமுக​வின் குழப்​பத்​தால்​தான் தமிழகத்​துக்கு பின்​னடைவு ஏற்​பட்​டது. முதல்​வர் ஆலோ​சனை நடத்தி உச்சநீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர முடிவுசெய்​தார்.

திமுக​வும் வழக்கு பதிவு செய்​துள்​ளது.இது​போல ஒரே மாநிலத்​தில் இருந்து தனித்​தனி​யாக பல வழக்​கு​கள் பதிவு செய்​வது குழப்​பத்​தையே விளைவிக்​கும்.அதி​முக​வும் இதே​போல​தான் செயல்​படு​கிறது.ஜெயலலிதா எவ்​வளவு உறுதி​யாக முடிவு எடுப்​பாரோ,அதற்கு நேர்மாறாக தற்​போதைய அதி​முக,கர்​நாடக பாஜக​வின் ஆதர​வாக
செயல்​படு​கிறது.மேகே​தாட்டு அணை தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் ஆதரவு தெரி​வித்து தீர்​மானம்
நிறைவேற்​றிவிட்​டு,அதி​முக கடந்தவாரம் உயர்நீதி​மன்​றத்​தில் தனி​யாக ஒரு வழக்கு தொடர்ந்​தது.

இது​போன்ற நிலைப்பாட்​டில் உள்​ளவர்​களை வைத்து எப்​படி அனைத்​துக்கட்​சிக் கூட்​டம் நடத்தமுடி​யும்.முதல்வருக்கு நெருக்​கடி கொடுப்​ப​தாக நினைத்து தமிழக மக்​களுக்கு எதி​ராகச் செயல்​படு​கின்​றனர்.

கபினி அணை​யில் இருந்து கர்​நாடக அரசு இப்​போது திறந்​து​ விட்ட நீர் நமக்குப் போது​மான​தாக இல்​லை.
தமிழகத்​துக்கு 17 டிஎம்சி தண்​ணீர் வேண்​டும்.ஆனால், உபரிநீரை திறந்​து​விட்டு கணக்குக் காட்​டு​வதை
ஏற்கமுடி​யாது.தமிழக நலனைப் பாது​காக்க,உச்சநீதி​மன்​றத்​தில் அரசு சார்​பில் ஆகஸ்ட் 3 ஆம்​ தேதி (இன்​று)
வழக்​கு தொடரப்​படு​கிறது.

இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Leave a Response