நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவது ஏன்? – பின்னணி தகவல்

தமிழ்நாடு பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் இந்தமுறை தொகுதி மாறுகிறார்.அவர் தற்போது நெல்​லை தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.இந்தத் தேர்தலில் அதைவிட்டுவிட்டு சாத்​தூருக்கு மாறப்போகி​றார் என்று
செய்​திகள் வந்தன.தற்​போது அது உறுதியாகி இருக்​கிறது.

பாஜக போட்​டி​யிடும் தொகு​தி​கள் பட்​டியலில் நெல்​லை இடம்பெறவில்லை.அதற்குப் பதிலாக சாத்​தூர்
இடம்​பிடித்​திருக்கிறது.

ஏன் இப்படி?

2001 சட்​டபேர​வைத் தேர்​தல் முதல் தொடர்ச்​சி​யாக நெல்லை தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வரு​கி​றார் ராதாபுரம் தொகு​தி​யைச் சேர்ந்த நயி​னார் நாகேந்​திரன். ஆனால், ஒரு தேர்​தலில் வென்றால் அடுத்த தேர்​தலில் தோல்வி
என்​பதுதான் நயி​னாரின் நிலையாக இருக்​கிறது.

1962 க்குப் பிறகு நெல்லை தொகு​தி​யில் ஒருமுறை வென்ற யாரும் அடுத்ததேர்​தலில் வென்றதாகச் சரித்​திரம்
இல்​லை.இது நயி​னாருக்​கும் அப்​படியே பொருந்தி வரு​வ​தாலேயே இம்​முறை தொகுதிமாறி அவர் சாத்​தூரில் களமிறங்​கு​வ​தாகச் சொல்​கி​றார்​கள்.

திருநெல்​வேலி​யில் மீண்​டும் போட்​டி​யிடு​வீர்​களா? என்று செய்​தி​யாளர்​கள் கேட்டபோதெல்​லாம் மழுப்​பலாகவே பதில் சொல்லி வந்த நயி​னார் நாகேந்​திரன், சாத்​தூர் தொகு​தி​யில் கணிச​மாக இருக்​கும் முக்​குலத்​தோர் வாக்கு
வங்​கியைக் குறி​வைத்​தும் அங்கு இடம்​பெயர்​வ​தாகச் சொல்​கி​றார்​கள்.

தொகுதி மாறப் போவதை வெளிப்​படை​யாகச் சொல்​லா​விட்​டாலும் கடந்த 6 மாத கால​மாகவே சாத்​தூர்
தொகு​தி​யில் வீடு​பிடித்துக் குடியேறும் வேலை​களை சத்தமில்லாமல் செய்துவந்​திருக்கிறார் நயி​னார் நாகேந்திரன்.

அத்​துடன்,அவரது மகன் நயி​னார் பாலாஜி,சாத்​தூர் தொகு​தி​யில் நிகழ்ச்​சிகளை நடத்​து​வ​தி​லும்,முக்​குலத்​தோர் அமைப்​பு​களை கவனிப்​ப​தி​லும் அக்​கறை காட்​டி​ வந்தார் என்று சொல்லப்பட்டது.இதைவைத்​து,நயி​னார் நெல்​லை​யிலும் பாலாஜி சாத்​தூரிலும் களமிறங்​கப் போவ​தாகக் கூட செய்​தி​கள் கசிந்​தன.

அதேசம​யம், மாநில பாஜக துணைத்தலை​வ​ரும் தனது நண்​பரு​மான கோபால்​சாமிக்கு இராஜ​பாளை​யம் தொகு​தி​யைப் பெற்​றுத் தரு​வ​தாக வெளியில் உறு​தி​யளித்​திருந்​தாலும் உள்ளுக்குள் அவரை வளரவிடக்கூடாது என்று முடிவு செய்து அதைச் செயலாக்கியும் விட்டார்.இராஜபாளையம் தொகுதியை ஜான் பாண்டியனுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

நயினார் நாகேந்திரன் சொன்னதை நம்​பி,இராஜபாளையம் தொகுதியில் கோபால்​சாமி வாக்​குச் சேகரிப்​பிலும்
ஈடு​பட்​டிருந்​தார்.இந்தநிலை​யில்,ஒரே (விருதுநகர்) மாவட்​டத்​தில் இரண்டு தொகு​தி​களை பாஜகவுக்குக் கேட்​க​முடி​யாது என்​ப​தால் சாத்​தூரை மட்​டும் பெற்​றுக்கொண்டு நண்​பரை ஏமாற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response