சசிகலா உடல்நிலை – மருத்துவமனையின் இன்றைய அறிக்கை

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவிற்கு கடந்த வாரம் மூச்சுத் திணறல், காய்ச்சல், சளித் தொல்லை ஆகியன ஏற்பட்டதைத் தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்குப் பிறகு திடீரென்று இரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளது. இதனால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக உயர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சசிகலா உடல் நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா உடல் நிலை சீராக உள்ளது. இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. சசிகலா உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response