திருப்பி அடிக்கும் தினகரன் மிரண்டிருக்கும் மோடி அமித்ஷா அணி

நான் கூட மோடி,அமித் ஷா ஜோடியை என்னவோ என்று நினைத்தேன். ஆஃப்ட்ரால் டிடிவி தினகரனையே இவங்களால சமாளிக்க முடியலை. வட இந்தியாவில் இவர்கள் பாச்சா பலிக்குது என்றால் ஒன்று ஆப்போனன்ட் அவ்ளோ வீக் கா இருக்கனும் இல்ல தமிழ்நாட்ல விளையாட தெரியாமல் புட்பால் னு நெனச்சு கிரிக்கெட் பால காலால உதச்சிட்டு இருக்கணும்

திருச்சியில் நீட் எதிர்ப்புக்காக டிடிவி.தினகரன் கூட்டிய கூட்டத்தில் கூடிய கூட்டம் பார்த்து பாஜக மிரண்டது ஒருபக்கம் என்றால் மக்கள் மத்தியில் தினகரனின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்கான சான்றுதான் மேலே உள்ள சமூகவலைதளப் பகிர்வு.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பாஜக போட்ட பெரிய தப்புக்கணக்கு அதிமுகவை தவறாகக் கணித்தது தான். அதிமுக கட்சி என்பது கொள்கையாளர்களைக் கொண்ட கட்சி அல்ல. அது முழுக்க முழுக்க விசுவாசிகளைக் கொண்ட கட்சி. இந்த அளவில் பாஜகவின் கணிப்பு சரி. ஆனால் அந்த விசுவாசிகள் பூராவும் எம்ஜியார் விசுவாசிகளாகவோ ஜெயலலிதா விசுவாசிகளாகவோ தான் இருப்பார்கள் என நினைத்தது தான் பாஜக செய்த பெரிய தவறு.

ஜெயலலிதாவிற்காக மட்டுமே ஓட்டுப் போடுபவர்கள் பெரும்பாலும் அதிமுக உறுப்பினராக இருக்கமாட்டார்கள். திமுக வரக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவிற்கு போடுபவர்களும் கணிசமானவர்கள். இந்தக் கணக்கு, அதிமுக வின் உறுப்பினர் அட்டை வாங்கியுள்ள கட்சி உறுப்பினர்கள். இவர்களில் பெரும்பாலான நபர்கள் ஜெயலலிதா விசுவாசிகள் கிடையாது. ஜெயலலிதாவை அவர்கள் சந்தித்துப் பேசிக் கூட இருக்கமாட்டார்கள். அவர்கள் சசிகலா குடும்பத்தின் விசுவாசிகள். அதிமுக என்ற கட்சியே எம்ஜியார் காலத்துக்குப் பிறகு முழுக்க சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. சொல்லப்போனால் இந்தியாவிலேயே மிகப்பெரிய குடும்பக் கட்சி என்றால் அது அதிமுக தான்.

சரி ஒரு சிம்பிள் கேள்வி. பாஜக நினைத்தால் இப்போது கூட (முன்பு செய்தது போல) தினகரனை கைது செய்ய முடியும் . ஏன் செய்யவில்லை?

சசிகலாவைக் கைது செய்தால் தினகரன் வந்தார். தினகரனைக் கைது செய்தால் திவாகரன் வருவார். இவர்கள் தான் அதிமுகவின் முதுகெலும்பு.

பாஜக போட்ட தப்புக்கணக்கு யாதெனில் சசிகலாவிற்கு இருக்கும் ஆதரவு சாதி ஆதரவு மட்டுமே என நினைத்தது தான். ஓபிஎஸ் சை முன்னிறுத்தினால் அதைச் சரி செய்து விடலாம் என தப்புக்கணக்கு போட்டது. ஆனால் அது தவறு என பிறகு தான் புரிந்துகொண்டனர்.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான்: சசிகலா குடும்பம் தான் அதிமுகவின் ஆணி வேர். ஜெயலலிதா ஒரு brand image மட்டுமே. முதலாளியை விட மேனேஜர் மீது அதிக விசுவாசத்தைக் காட்டுகிற ஊழியர்கள் இருப்பது இயல்பானது தானே? ஏனென்றால் அவர்களுக்கு மேனேஜர் தான் முதலாளி.

30 வருடங்களாக அதிமுகவின் ஒவ்வொரு அசைவையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஒரு குடும்பம் இன்று தாங்கள் பார்த்து பதவி கொடுத்த நான்கைந்து பேர் தங்களுக்கு எதிராகத் திரும்பினால் பயந்து பின்வாங்குமா என்ன? 30 வருடங்களாக நீங்கள் கஷ்டப்பட்டுக் காப்பாற்றிய வீட்டை எவனோ ஒரு பான்பராக் போட்ட சேட்டு வந்து காலி பண்ணச் சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு போய்விடுவீர்களா என்ன? முதலில் டீல் பேசுவீர்கள். சரிப்பட்டு வரவில்லை என்றால் எதிர்த்து நின்று அடிப்பீர்கள் . அப்படித்தான் இன்று சின்னம்மா குடும்பம் எதிர்த்து நிற்கிறது. சசிகலா குடும்பம் உள்ளவரை அதிமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்கமுடியாது..!

Leave a Response