பாபிலோன் தொங்கும் கார்கள் தோட்டத்தில் பிரபு தேவா-ஹன்ஷிகா நடனம்..!


பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் ‘குலேபகாவலி’ படஹ்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்திற்காக இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல்காட்சியை அமைக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது தொங்கும் தோட்டமான பாபிலோன் தோட்டத்தை போல வடிவமைக்க திட்டம் தீட்டினார்.

அதில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கலை இயக்குனர் கதிரிடம் ஆலோசித்த பொழுது, கதிர் ஒரு கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார். உடனே தயாரிப்பாளர் ராஜேஷ் கலை இயக்குனர் கதிரிடம் அதனை பிரம்மாண்டமாக வடிமைக்க சொன்னார்.

இதற்காக சென்னைக்கு அருகாமையில் உள்ள பத்து ஏக்கர் நிலத்தில் அரங்க பணியை ஐநூருக்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் சுமார் நூறுவிதமான கார்களை கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை இருபத்தைந்து நாட்களில் உருவாக்கினார்களாம்..

இது படத்தில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் என்பதால் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானியை அழைத்துவந்து நடனம் அமைக்க வைத்துள்ளார் பிரபுதேவா. ஜானியும் பிரபுதேவாவும் கலந்து ஆலோசித்து நடன அமைப்பில் பல புதுமையான வித்தைகளை புகுத்தினர். இப்பாடலுக்காக பத்து நாட்களுக்கு முன்பே மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்களையும் மேலும் இப்பாடலை மெருகேற்ற மும்பை மாடல்களையும் வரவழைத்து பாடலை படமாக்கியுள்ளனர்.

Leave a Response