உணர்வுப்பூர்வமான படங்களை பார்வையாளர்கள் நெகிழும் விதமாகவும் அதேசமயம் சமூக கருத்துக்களோடும் படமாக தருபவர்தான் சீனு ராமசாமி.. ‘தர்மதுரை வெற்றிப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மீண்டும் விஜய்சேதுபதியையே வைத்து ‘மாமனிதன்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் சீனுராமசாமி..
இந்தநிலையில் சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றையும் அவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சொன்னது வேறு யாரும் அல்ல.. சமீபத்தில் சசிகுமாரை சந்தித்து இவர் சொன்ன கதை சசிக்கு ரொம்பவே பிடித்துப்போனதாம்..
பொதுவாக ஒரு படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த் படத்தை இயக்குவார் சீனு ராமசாமி. ஆனால் இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குவாரா.? அல்லது எதை முதலில் இயக்குவார் என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை.