
மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என குறிப்பிட்டார்.
கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால், விசாரித்து உண்மை என்றால் உடனடியாக ராஜினாமா செய்வார்கள் என தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தில் தேர்தல் பிரகடனமாக பல்வேறு உறுதி மொழிகளை அவர் வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், பல்லக்கில் ஏறுவதை விட பல்லக்கு சுமப்பவனாக இருப்பதையே விரும்புவதாகக் கூறினார்.
நாடாளுமன்ற வேட்பாளர்கள்….
திருவண்ணாமலை – அருண்
ஆரணி – ஷாஜி
நாமக்கல் – தங்கவேலு
ராமநாதபுரம் – விஜயபாஸ்கர்
கரூர் – டாக்டர் அருள்
மதுரை – எம்.அழகர்
தென்சென்னை – ரங்கராஜன்
கடலூர் – அண்ணாமலை
விருதுநகர் – முனியசாமி
திருப்பூர் – வி.எஸ். சந்திரகுமார்
பொள்ளாச்சி – ஆர். மூகாம்பிகை
கோவை – ஆர். மகேந்திரன்
18 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள்….
பெரம்பூர் – வி.பிரியதர்ஷினி
திருப்போரூர் – கே.யு.கருணாகரன்
சோளிங்கர் – கே.எஸ். மலைராஜன்
குடியாத்தம் – டி.வெங்கடேசன்
ஆம்பூர் – நந்தகோபால்
ஓசூர் – ஜெயபால்
நிலக்கோட்டை – ஆர்.சின்னதுரை
திருவாரூர் – கே. அருண் சிதம்பரம்
தஞ்சாவூர் – துரையரசன்
ஆண்டிப்பட்டி – தங்கவேல்
பெரியகுளம் – கே.பிரபு
சாத்தூர் – என். சுந்தர்ராஜ்
பரமக்குடி – உக்கிரபாண்டியன்
விளாத்திகுளம் – டி.நடராஜன்
திருபெரும்புதூர் – ஸ்ரீதர்


