
பல கோடி ரூபாய் மதிப்பில் மகன் மிதுன் பழனிச்சாமி மற்றும் மனைவி ராதா பழனிசாமி பெயரில் எடப்பாடி வாங்கிய குவித்துள்ள சொத்துக்களின் ஆதாரம் வெளியாகியுள்ளது
ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் 4.15 ஏக்கர் நிலத்தில் ஒரு சொகுசு பங்களா ஒன்று கட்டப்பட்டுவருகிறது
நிலத்தைச் சுற்றி 15 அடிக்கு சுற்றுச்சுவர் கட்டி மிகவும் இரகசியமாக இந்த பங்களாவை கட்டிவருகிறார்கள்.
யாரோட பங்களாவாக இருக்கும்? என்று அந்தப்பகுதியில் விசாரிச்சு பார்த்தபோது எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபட்டது.
இன்னும் கொஞ்சம் தீவிரமாக விசாரிச்சபோது தெரிந்த விஷயம், இந்த 4.15 ஏக்கர் இடம் அவர்களின் பூர்விக சொத்து இல்லை என்பதும், இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் தான் இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளதாகத் தெரிகிறது.
பல கோடி ரூபாய் சொத்து மிதுன் பழனிச்சாமி மற்றும் ராதா பழனிசாமி ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மிதுன் மற்றும் ராதா பழனிசாமிக்கு இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது?
அப்படி அவர் என்ன தொழில் செய்கிறார் மிதுன் பழனிசாமி?
இது போக இந்த 4.15 ஏக்கருக்கு அருகாமையில் ஒரு பெரிய தோட்டத்தை வாங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் AT சசி பிரபு
இவர் தான் தற்போதைக்கு கொங்கு பகுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் collection ஏஜென்ட் என்பது கூடுதல் தகவல் .
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் செலவிற்குக் கிடைத்த பணத்தை தன் மகன் மற்றும் மனைவி பெயரில் எப்படி எல்லாம் அரசை குழப்பி நிலம் வாங்கிக் குவித்து இருக்கிறார் எடப்பாடி என்று தெரிந்து கொள்ளுங்கள்
தமிழகத்தில் தேர்தல் ஆனது 19 April 2024 அன்று நடக்கிறது 4 June 2024 தேர்தல் முடிவு வருகிறது
3 July 2024 அன்று நசியனூரில் ரோபின், ரிக்ஸன் என்ற இரு நபர்களிடம் 1 ஏக்கர் 76 சென்ட் மற்றும் 1 ஏக்கர் 73 சென்ட் அளவிலான நிலங்களை மிதுன் பழனிச்சாமி பெயரில் ஒரே நாளில் சந்தை மதிப்பை விட பல கோடி மதிப்பில் வாங்கி குவிக்கப்படுகிறது
பிறகு சரியாக ஒரு வருடம் ஆகும் சமயத்தில் ரோபினிடம் வாங்கிய நிலத்தை 23 Apr 2025 அன்று ஒரு பகுதி 45 சென்ட் எடப்படி பழனிச்சாமியின் மனைவி ராதா பழனிச்சாமி பெயரில் மாற்றப்படுகிறது
பின்பு 07 May 2025 மீண்டும் ஒரு பகுதி 65 சென்ட் மகனிடம் இருந்து மனைவி பெயரில் மாற்றப்படுகிறது
அடுத்து ஒரு மாதம் கழித்து 13 June 2025 அன்று அடுத்த பகுதி 35 சென்ட் ராதா பழனிச்சாமி பெயருக்கு மாற்றப்படுகிறது
இது போக அந்த ரிக்ஸன் என்ற நபரிடம் இருந்து மிதுன் பெயருக்கு வாங்கிய நிலத்தில் ஒரு பங்கு 70 சென்ட் 13 June 2025 அன்று ராதா பழனிச்சாமி பெயரில் மாற்றப்படுகிறது
இது இன்னும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இப்போது மொத்த நிலத்தையும் சுற்றி சுமார் 15 அடிக்கும் மேல் சுற்றுசுவர் எழுப்பிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி
அதன் உள்ளே மிகப்பெரிய மாட மாளிகை கட்டும் பணியைத் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் புகைப்பட ஆதாரங்களை விரைவில் வெளியிட இருக்கிறோம்.
– சமூக வலைதளங்களில் வலம்வரும் இந்தத் தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


