வலுவிழக்கும் நேரத்திலும் 22 மாவட்டங்களில் மழை – டிட்வா புயல் அட்டகாசம்

வங்​கக் கடலில் நிலை​கொண்​டிருந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் அடுத்​தடுத்து வலு​விழந்து காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகு​தி​யாக மாறி​யுள்​ளது. இதனால், நீல​கிரி, ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்​டங்​களில் இன்று ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை​யும், திருப்​பூர், தேனி, திண்​டுக்​கல் உட்பட 8 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரைக் கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு….

தென்​மேற்கு வங்​கக்​கடல் மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த
காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலம், வடக்கு திசை​யில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணி​யள​வில் வலு​விழந்து
காற்​றழுத்தத் தாழ்வு மண்​டல​மாக நீடித்​தது. தொடர்ந்து சென்​னைக்கு கிழக்கு – தென் கிழக்கே சுமார் 40 கி.மீ. தொலை​விலும், புதுச்​சேரிக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலை​விலும் நிலை​கொண்​டிருந்​தது. இது தென்​மேற்கு திசை​யில் வடதமிழகம் – புதுச்​சேரி கடலோரப் பகு​தி​களை நோக்கி நகர்ந்​து, ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்​வுப்
பகு​தி​யாக வலுகுறையக் கூடும். மேலும், காற்​றழுத்தத் தாழ்​வுப் பகு​தி​யாக வலு குறை​யும்.

இதன் காரண​மாக தமிழ்நாட்டில் பெரும்​பாலான இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று இலேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும். நீல​கிரி, ஈரோடு, கோயம்​புத்​தூர் ஆகிய 3 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை​யும், திருப்​பூர், தேனி, திண்​டுக்​கல், தென்​காசி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, சேலம், நாமக்​கல் ஆகிய 8 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக் கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

வானிலை அறிக்கை இப்படிச் சொன்னாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இடி மின்னலும் சேர்ந்திருக்கிறது.புயலாகத் தொடங்கி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் நேரத்திலும் தமிழ்நாட்டில் சுமார் 22 மாவட்டங்களில் மழையையும் சூறாவளிக் காற்றையும் வீசிச் செல்கிறது டிட்வா புயல்.

Leave a Response