மீண்டும் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் – பரபரக்கும் தில்லி

அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒருங்​கிணைத்​தால் தான் 2026 சட்​டப்​பேரவைத் தேர்​தலில் கரை சேர முடியும் என எடப்பாடி பழனிச்​சாமிக்கு 10 நாட்​கள் கெடு விதித்து செங்​கோட்​டையன் போர்க் கொடி தூக்​கினார். அதனால், செங்​கோட்​டையன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​களின் கட்சி பதவி​கள் பறிக்​கப்​பட்​டன. இதைத்​தொடர்ந்​து, ஹரித்​வார் செல்​வ​தாகக் கூறி​விட்டுச் சென்ற செங்​கோட்​டையன், தில்​லி​யில் அமித் ஷா மற்​றும்
நிர்​மலா சீதா​ராமன் ஆகியோரைச் சந்​தித்துப் பேசிவிட்டு வந்தார்.

இந்தச் சந்​திப்​பின் போது, 2026 தேர்​தலில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்​சியைப் பிடிக்க வேண்​டுமென்​றால், ஒருங்​கிணைந்த அதிமுக​வுடன் தேர்​தலைச் சந்​திக்க வேண்​டும் என அமித் ஷாவிடம் செங்​கோட்​டையன்
வலி​யுறுத்​தி​ய​தாகத் தெரி​கிறது.அது​மட்​டுமில்​லாமல், ஓபிஎஸ், தினகரனை தில்​லிக்கு அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும் என அமித் ஷாவிடம் செங்​கோட்​டையன் கூறிய​தாக​வும் தெரி​கிறது. இதையடுத்​து, இரு​வரை​யும் தில்​லிக்கு அழைத்து பேச பாஜக மேலிடம் திட்​ட​மிட்டு வரு​வ​தாக​வும், இதற்​கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று
வரு​வ​தாக​வும் பாஜக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

அதற்கு முன்பாக, பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரனிட​மும் ஆலோ​சனை நடத்​த​வும் பாஜக மேலிடம் திட்​ட​மிட்​டுள்​ள​து.இதற்​காக அவர் இன்று (11 ஆம் தேதி) தில்லி செல்​கிறார். அங்கு அமித் ஷா, ஜெ.பி.நட்​டா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் உள்​ளிட்​டோரைச் சந்​திக்​கிறார்.

நயி​னார் நாகேந்​திரனிடம் ஆலோ​சித்த பிறகு ஒபிஎஸ், தினகரன் ஆகியோரை தில்​லிக்கு அழைத்து சமா​தான பேச்​சு​வார்த்தையை நடத்தத் திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதன்​மூலம் கூட்​ட​ணி​யில் ஏற்​பட்​டுள்ள சலசலப்​பு​களுக்கு முற்​றுப்​புள்ளி வைத்​து, பிரிந்து சென்​றவர்​களை ஒருங்​கிணைத்​து, பலமான கூட்​டணி அமையும் என்று அக்கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன.

பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்தார் ஓபிஎஸ்.ஆனால் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓபிஎஸ் அணி ஓட்டுபோட்டது.அதன்பின், நேற்று ஓபிஎஸ் அளித்த பேட்டியில், அதிமுகவை துண்டாக்கி விளையாடுவதை பாஜக இரசிக்கிறது என நான் எண்ணவில்லை என்றும் தில்லியில் இருந்து இதுவரை எனக்கு அழைப்பு இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.இதுவரை என்று சொல்லியிருப்பதால் இனி வரும் என்கிற பொருளும் அதற்குள் இருக்கிறதென அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இப்படி தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாகவே பேசியிருக்கிறார் ஓபிஎஸ்.

இதனால், விரைவில் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணிக்குத் திரும்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response