கமல் பட சிக்கல் – ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம் இறங்கிவந்த கர்நாடகா

மணிரத்னம் இயக்கத்தில் கமல்,சிம்பு உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் படம் ஜூன் 5 ஆம் தேதி உலகெங்கும் வெளியானது.

அப்பட விளம்பர நிகழ்ச்சியில், கன்னடம் – தமிழ் உறவு குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கன்னட அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்த நிலையில் கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை.

இதற்கு எதி​ராக சமூக ஆர்​வலர் மகேஷ் ரெட்டி என்​பவர் உச்ச நீ​தி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நேற்று நீதிப​தி​கள் உஜ்ஜால் புயன், மன்​மோகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், ‘‘கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை​யின் தடை, அரசி​யலமைப்​பில் குறிப்​பிட்​டுள்ள பேச்​சு, கருத்து சுதந்​திரத்தை பறிக்​கும் செயல். கன்னட அமைப்​பினரின் மிரட்​டலுக்கு கர்​நாடக அரசு பணிந்​துள்​ளது”என வாதிடப்​பட்​டது.

நீதிபதி மன்​மோகன், ‘‘நாடு முழு​வதும் தக் லைஃப் படத்தை வெளி​யிட மத்​திய திரைப்​படச் சான்​றிதழ் வாரி​யத்​தின் சான்​றிதழ் போது​மானது. அதைப் பெற்ற படத்தை திரை​யிடு​வதை யாராலும் தடுக்க முடி​யாது. குறிப்​பிட்ட
கும்​பலோ, அமைப்​பினரோ சட்​டத்தை மீறு​வதை அனு​ம​திக்க முடி​யாது. திரையரங்கைக் கொளுத்​து​வோம் என கன்னட அமைப்​பினர் எச்​சரித்​தால், சட்​டம் ஒழுங்குக்கு பொறுப்​பான கர்​நாடக அரசு எப்​படி அமை​தி​யாக இருக்க முடி​யும்?

ஒரு கும்​பல் திரையரங்​கையோ, தெரு​வையோ கட்​டுப்​பாட்​டில் வைத்​திருப்​பதை அனு​ம​திக்க முடி​யாது. சட்​டத்​தின் ஆட்​சியை மீறு​வதை, கர்​நாடக அரசு எவ்​வாறு அனு​ம​திக்​கிறது? கர்​நாட​கா​வில் அனை​வரும் தக் லைஃப் படத்தை பார்க்க வேண்​டுமென ஆணை பிறப்​பிக்க முடி​யாது. ஆனால், நிச்​சய​மாக அந்​தப்படம் கர்​நாட​கா​வில் திரை​யிடப்பட வேண்​டும் என ஆணை பிறப்​பிக்க முடி​யும். கமல்​ஹாசன் கருத்​துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்​கலாம்.
பெங்​களூரு​வில் உள்ள அறி​வுஜீவி​கள் கூட்​டறிக்கை வெளி​யிடலாம். அதனை விடுத்து திரையரங்கை
கொளுத்​து​வோம் என்​பதை ஏற்க முடி​யாது.
கமல்​ஹாசன் மன்​னிப்பு கேட்க வேண்​டுமென கர்​நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது​தான்
நீதிப​தி​யின் பணி​யா? இந்த வழக்​கில் கர்​நாடக அரசு ஏன் இன்​னும் பதில் மனு தாக்​கல் செய்​யாமல் இருக்​கிறது? ஜூன் 18 ஆம் தேதி (இன்​று) பதில் தாக்​கல் செய்ய வேண்​டும். மறு​நாள் (ஜூன் 19) நாங்​கள் இந்த வழக்கை மீண்​டும் விசா​ரிக்​கிறோம்​”என்​றார்​.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணைமுதல்வர் டி.கே. சிவகுமார், உச்சநீதிமன்ற உத்தரவை நாம் மதிக்க வேண்டும். அனைவருக்கும் வரம்புகள் உள்ளன. நமக்கு வரம்புகள் இருக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அனைத்து கன்னட ஆர்வலர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து அமைதியாக இருங்கள். யாரும் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது. கருத்தை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. கர்நாடகா எப்போதும் அமைதியை விரும்பும் மாநிலமாக இருந்து வருகிறது, பெங்களூரு மக்கள் தாராளமாக இருக்க வேண்டும். பெங்களூரில் அனைத்து சாதிகள், மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இது ஒரு சர்வதேச நகரம். கர்நாடகமக்கள் எப்போதும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தச் சிக்கலில் கன்னட அமைப்புகளோடு சேர்ந்து கர்நாடக முதலமைச்சரும் பேசியிருந்தார்.அதனால்தான் படம் அங்கு வெளியாகவில்லை.இப்போது உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டியதும் கர்நாடக அரசு இறங்கி வந்திருக்கிறது.

Leave a Response